தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உடையன்ஆயின் உண்ணவும்

உடையன்ஆயின் உண்ணவும்
315
உடையன்ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ் துணை; நெடு மான் அஞ்சி
இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல,
5
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன்
கான்று படு கனை எரி போல,
தோன்றவும் வல்லன் தான் தோன்றுங்காலே.
திணையும் துறையும் அவை.
நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:54:27(இந்திய நேரம்)