தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எஃகு உளம் கழிய

எஃகு உளம் கழிய
282
எஃகு உளம் கழிய, இரு நிலம் மருங்கின்,
அருங் கடன் இறுத்த பெருஞ் செயாளனை,
'யாண்டு உளனோ?' என, வினவுதி ஆயின்,
.............................................................................................
5
வரு படை தாங்கிய கிளர் தார் அகலம்
அருங் கடன் இறுமார் வயவர் எறிய,
உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே;
மலையுநர் மடங்கி மாறு எதிர் கழியத்
.......................................................................................
10
அலகை போகிச் சிதைந்து வேறாகிய
பலகை அல்லது, களத்து ஒழியாதே;
சேண் விளங்கு நல் இசை நிறீஇ,
நா நவில் புலவர் வாய் உளானே.
திணை ...................
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:57:25(இந்திய நேரம்)