தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம்

வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம்
292
வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம்
யாம் தனக்கு உறுமுறை வளாவ, விலக்கி,
'வாய் வாள் பற்றி நின்றனன்' என்று,
சினவல் ஓம்புமின், சிறு புல்லாளர்!
5
ஈண்டே போல வேண்டுவன்ஆயின்,
என் முறை வருக என்னான், கம்மென
எழு தரு பெரும் படை விலக்கி,
ஆண்டும் நிற்கும் ஆண்தகையன்னே.
திணை வஞ்சி; துறை பெருஞ்சோற்றுநிலை.
விரிச்சியூர் நன்னாகனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:10:11(இந்திய நேரம்)