தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குய் குரல் மலிந்த

குய் குரல் மலிந்த
250
குய் குரல் மலிந்த கொழுந் துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர்,
கூந்தல் கொய்து, குறுந் தொடி நீக்கி,
5
அல்லி உணவின் மனைவியொடு, இனியே
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்!
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித் தலைப் பெருங் காடு முன்னிய பின்னே.
திணையும் துறையும் அவை.
...................தாயங்கண்ணியார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:20:27(இந்திய நேரம்)