தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குன்றும் மலையும் பல

குன்றும் மலையும் பல
208
'குன்றும் மலையும் பல பின் ஒழிய,
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு' என
நின்ற என் நயந்து அருளி, 'ஈது கொண்டு,
ஈங்கனம் செல்க, தான்' என, என்னை
5
யாங்கு அறிந்தனனோ, தாங்கு அருங் காவலன்?
காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர்
வாணிகப் பரிசிலன் அல்லென்; பேணி,
தினை அனைத்துஆயினும், இனிது அவர்
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே.
திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது,'இது கொண்டு செல்க!' என்று அவன் பரிசில் கொடுப்பக் கொள்ளாது, அவர் சொல்லியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:21:37(இந்திய நேரம்)