தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நீயே, பிறர் ஓம்புறு

நீயே, பிறர் ஓம்புறு
40
நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில்
ஓம்பாது கடந்து அட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன் நின்
அடி பொலியக் கழல் தைஇய
5
வல்லாளனை; வய வேந்தே!
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்து அடங்க,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்று கண்டாங்குக் காண்குவம் என்றும்
இன்சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும!
10
ஒரு பிடி படியும் சீறிடம்
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே!
திணை அது; துறை செவியறிவுறூஉ.
அவனை ஆவூர் முலங்கிழார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:42:09(இந்திய நேரம்)