தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாசறையீரே! பாசறையீரே!

பாசறையீரே! பாசறையீரே!
285
பாசறையீரே! பாசறையீரே!
துடியன் கையது வேலே; அடி புணர்
வாங்கு இரு மருப்பின் தீம் தொடைச் சீறியாழ்ப்
பாணன் கையது தோலே; காண்வரக்
5
கடுந் தெற்று மூடையின்......................
வாடிய மாலை மலைந்த சென்னியன்;
வேந்து தொழில் அயரும் அருந் தலைச் சுற்றமொடு
நெடு நகர் வந்தென, விடு கணை மொசித்த
மூரி வெண் தோல்
10
சேறுபடு குருதிச் செம்மல் உக்குஓஒ!
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக,
நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே;
அது கண்டு, பரந்தோர் எல்லாம் புகழத் தலை பணிந்து
இறைஞ்சியோனே, குருசில்! பிணங்கு கதிர்
15
அலமருங் கழனித் தண்ணடை ஒழிய,
இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர்
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே.
திணை வாகை; துறை ...............முல்லை.
அரிசில் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:48:03(இந்திய நேரம்)