தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெரிது ஆராச் சிறு சினத்தர்

பெரிது ஆராச் சிறு சினத்தர்
360
பெரிது ஆராச் சிறு சினத்தர்,
சில சொல்லான் பல கேள்வியர்,
நுண் உணர்வினான் பெருங் கொடையர்,
கலுழ் நனையான் தண் தேறலர்,
5
கனி குய்யான் கொழுந் துவையர்,
தாழ் உவந்து தழூஉ மொழியர்,
பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி,
ஏமம் ஆக இந் நிலம் ஆண்டோர்
சிலரே; பெரும! கேள், இனி: நாளும்,
10
பலரே, தகையஃது அறியாதோரே;
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது;
இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால்,
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சு வரப்
15
பாறு இறை கொண்ட பறந்தலை, மா கத
கள்ளி போகிய களரி மருங்கின்,
வெள்ளில் நிறுத்த பின்றை, கள்ளொடு
புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி,
புலையன் ஏவ, புல் மேல் அமர்ந்து உண்டு,
20
அழல் வாய்ப் புக்க பின்னும்,
பலர் வாய்த்து இராஅர், பருத்து உண்டோரே.
திணையும் துறையும் அவை.
தந்துமாறனைச் சங்கவருணர் என்னும் நாகரியர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:50:50(இந்திய நேரம்)