மீன் உண் கொக்கின் தூவி அன்ன
மீன் உண் கொக்கின் தூவி அன்ன
'மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே.
திணை அது; துறை உவகைக்
கலுழ்ச்சி.
பூங்கண் உத்திரையார்
பாடியது.
புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:57:46(இந்திய நேரம்)