தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirikadukam


மிகைப் பாடல்கள்
கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலில் தோன்றல்,
இரப்பவர்கண் தேய்வேபோல் தோன்றல், இரப்பவர்க்கு ஒன்று
ஈவார்முகம்போல் ஒளிவிடுதல்,-இம்மூன்றும்
ஓவாதே திங்கட்கு உள.
(புறத்திரட்டு. 1222) 1
பொருள் இல் ஒருவற்கு இளமையும், போற்றும்
அருள் இல் ஒருவற்கு அறனும், தெருளான்
திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும்,-மூன்றும்
பரித்தாலும் செய்யா பயன்.
(புறத்திரட்டு. 1228) 2
சால் நெறிப் பாரா உழவனும், தன் மனையில்
மானம் ஒன்று இல்லா மனையாளும், சேனை
உடன் கொண்டு மீளா அரசும்,-இம்மூன்றும்
கடன் கொண்டார் நெஞ்சில் கனா.
3
ஏர்க் குற்றம் பாரா உழவனும், இன் அடிசில்
பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும், ஊர்க்கு
வரும் குற்றம் பாராத மன்னும்,-இம் மூவர்
இருந்திட்டு என்? போய் என், இவர்?

4

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:24:57(இந்திய நேரம்)