Primary tabs
பதிகம்
*[ கதைபொதிபாட்டு]
இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்குஒளி மேனி விரிசடை யாட்டி
பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றித்
தென்திசைப் பெயர்ந்தஇத் தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு தன்கீழ் நின்று
மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு
வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை
செங்குணக்கு ஒழுகிய அச்சம்பா பதிஅயல்
ஆங்கு இனிது இருந்த அருந்தவ முதியோள்
ஓங்குநீர்ப் பாவையை உவந்துஎதிர் கொண்டு ஆங்கு
ஆணு விசும்பின் ஆகாய கங்கை
வேணவாத் தீர்த்த விளக்கே வாஎன,
பின்னிலை முனியாப் பெருந்தவன் கேட்டுஈங்கு
அன்னை கேள்இவ் அருந்தவ முதியோள
நின்னால் வணங்கும் தகைமையள் வணங்குஎனப
கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி
கோள்நிலை திரிந்து கோடை நீடினும
தான்நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை
தொழுதனள் நிற்பஅத் தொல்மூ தாட்டி
கழுமிய உவகையில் கவான்கொண் டிருந்து
தெய்வக் கருவும் திசைமுகக் கருவும்
செம்மலர் முதியோன் செய்த அந்நாள்
என்பெயர்ப் படுத்தஇவ் விரும்பெயர் மூதூர்
நின்பெயர்ப் படுத்தேன் நீவா ழியஎன
இருபால் பெயரிய உருகெழு மூதூர்
பெருவிழா அறைந்ததும், பெருகியது அலர்எனச
சிதைந்த நெஞ்சிற் சித்திரா பதிதான
வயந்த மாலையால் மாதவிக்கு உரைத்ததும்,
மணிமே கலைதான் மாமலர் கொய்ய
அணிமலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும
ஆங்குஅப் பூம்பொழில் அரசிளங் குமரனைப
பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன
துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின
மணிமே கலாதெய்வம் வந்துதோன் றியதும
மணிமே கலையைமணி பல்லவத்து உய்த்ததும்,
உவவன மருங்கின்அவ் வுரைசால் தெய்வதம
சுதமதி தன்னைத் துயில்எடுப் பியதூஉம
ஆங்குஅத் தீவகத்து ஆயிழை நல்லாள்
உழந்தோள் ஆங்கண்ஓர் ஒளிமணிப் பீடிகைப
பழம்பிறப் பெல்லாம் பான்மையின் உணர்ந்ததும்,
உணர்ந்தோள் முன்னர் உயர்தெய்வம் தோன்ற
மனம்கவல் ஒழிகென மந்திரம் கொடுத்ததும
தீப திலகை செவ்வனம் தோன்ற
மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும்,
பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரோடு
யாப்புஉறு மாதவத்து அறவணர்த் தொழுததும்,
அறவண அடிகள் ஆபுத் திரன்திறம்,
அங்கைப் பாத்திரம் ஆபுத் திரன்திறம
சிந்தா தேவி கொடுத்த வண்ணமும
மற்றுஅப் பாத்திரம் மடக்கொடி ஏந்திப்
பிச்சைக்கு அவ்வூர்ப் பெருந்தெரு அடைந்ததும்,
பிச்சை ஏற்ற பெய்வளை கடிஞையில்
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்,
காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று
ஆனைத் தீக்கெடுத்து அம்பலம் அடைந்ததும்,
கொங்குஅலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும்,
அம்பலம் அடைந்த அரசிளங் குமரன்முன
வஞ்ச விஞ்சையன் மகள்வடி வாகி
மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம்,
அறம்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்,
காயசண் டிகைஎன விஞ்சைக் காஞ்சனன
ஆயிழை தன்னை அகலாது அணுகலும்,
வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை
மைந்துஉடை வாளில் தப்பிய வண்ணமும்,
தெய்வக் கிளவியில் தெளிந்த வண்ணமும்,
அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச்
சிறைசெய் கென்றதும் சிறைவீடு செய்ததும்,
நறுமலர்க் கோதைக்கு நல்லறம் உரைத்துஆங்கு
ஆய்வளை ஆபுத் திரன்நாடு அடைந்ததும்
ஆங்குஅவன் தன்னோடு அணியிழை போகி
ஓங்கிய மணிபல் லவத்திடை உற்றதும்,
உற்றவள் ஆங்குஓர் உயர்ந்தவன் வடிவாய்ப்
பொன்கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்,
நவைஅறு நன்பொருள் உரைமி னோஎனச்
சமயக் கணக்கர் தம்திறம் கேட்டதும்,
ஆங்குஅத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து
புக்கவள் கொண்ட பொய்உருக் களைந்து
மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும்,
தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப்
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றதும்,
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
பதிகம் முற்றிற்று.
அரியேறு......ன் னுயர்த்த வாதியான் வண்டின்
புரியேறும் போதி நிழற்கீழ்ப் - பெரியோன்
அடித்தா மரைமலரை யன்போடுஞ் சென்று
பிடித்தார் பிறவார் பெயர்ந்து.
பூத்தபுனற் பூம்பொய்கைப் பூம்புகார் மாதவிக்கு
வாய்த்த மணிமே கலைதுறவைச் - சாத்தன்
மணிமே கலை..........
.................