தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Bharatham


xvi

சிறப்புப்பாயிரம்

20.
தென்னாட்டில்வடநாட்டிற்குடநாட்டிற்குணநாட்டிற்றெவ்
                                   வரோடக்,
கன்னாட்டியமர்பொருதுகங்கைநீரூட்டுவித்துக்கண்டன்
                                   வேங்கை,
எந்நாட்டுமெழுதியவன்றிருமரபோர்பெற்றபுகழ்யாவர்
                                   பெற்றார்,
அந்நாட்டுக்கொற்றமெல்லாமக்குரிசில்புகழொடவதரித்த
                                   தன்றே.
 
21.
ஆற்றியமெய்ச்செல்வத்தாலளகையைவென்றிருங்கவி
                                னாலமரரூரை,
மாற்றியபொற்றடமதில்சூழ்வக்கபாகையினறத்தின்வடி
                                வம்போலத்,
தோற்றியவக்கொங்கர்பிரான்சூழ்தமிழானாட்கொண்
                           டான்சுற்றத்தோடு,
போற்றியவிப்புவிமுழுதுந்தன்றிருப்பேர்மொழி
                      கொண்டேபுரந்தானம்மா.
 
22.
பிறந்துய்யக்கொண்டவனிப்பேருலகம்பெருவாழ்வுகூரு
                                 நாளில்,
நிறைந்த புகழ்ச்சனிநகர்வாழ்வில்லிபுத்தூரனைநோக்கி
                                 நீயுநானும்,
பிறந்ததிசைக்கிசை நிற்பப்பாரதமாம்பெருங்கதையைப்
                          பெரியோர்தங்கள்,
சிறந்த செவிக்கமுதமெனத் தமிழ்மொழியின்விருத்தத்
                         தாற்செய்கவென்றான்.
 
23.
இருக்காதிமறைமொழிந்தோனியம்பியவிப்பெருங்கதையை
                                 யாருங்கேட்பச்,
சுருக்காகப்புராணமுறைசொல்லுகவென்றலின்
                          வனுஞ்சொல்லலுற்றான்,
பெருக்காளர்முதலாய பெருங்குலத்தோரிக்கதையின்
                              பெற்றிகேட்டார்,
செருக்காகவவன்மைந்தன்வரந்தருவானிப்பதிகஞ்
                                செப்பினானே.

பகைவரிடத்தினின்றுபெரும் பொருளை யீட்டியதனாற் கமலமாதும்களிப்ப ரென்க.

20. அமர்பொருது பிறகு அப்போரில் பெருவீரங்காட்டியிறந்தோர்க்கு
அவர்வடிவந்தீட்டிய கல்லைப் பிரதிஷ்டைசெய்து அதற்குக் கங்கைநீரைக்
கொண்டுஅபிஷேகஞ்செய்வித்துஎன்க. நாட்டி = நிறுத்தி. கண்டன் -
சோழனுடைய, வேங்கை -புலிக்கொடி.

21. அமரரூரைமாற்றிய - தேவரூரை மேம்பாடு இல்லாமற் செய்வித்த.
மாற்றியவக்கபாகை, பொற்றடமதில்சூழ் வக்கபாகை என்க. ஆற்றிய மெய்ச்
செல்வம்என்றதனால் தருமவழியாற் சம்பாதித்த செல்வமென்றதாயிற்று.
வக்கபாகை -வரபதியாட்கொண்டானது நகரம்.

22. வரபதியாட்கொண்டான் வில்லிபுத்தூராரைப் பாரதத்தை
விருத்தப்பாவாற்பாடுமாறுகேட்டுக்கொண்டது. பிறந்து உய்யக்கொண்டவன் -
தான் பிறந்ததனால்உலகத்தாரைஉய்யுமாறு செய்தவனாகிய ஆட்கொண்டான்.

23. இருக்காதி மறைமொழிந்தோன் - வியாசன். சுருக்காக - சங்கிரகமாக.
புராணமுறை - பழமையான முறைமை. என்றலின்- என்று சொன்னதனால்.
அவனும் -அந்த வில்லிபுத்தூரனும். பெருக்காளர் - செல்வப்பெருக்கமுள்ளவர்:
இச்சொல் -அறிவுச் செல்வப் பெருக்கமுடையாரையும் பொருட் செல்வப்பெருக்க
முடையாரையுங்காட்டும். செருக்கு ஆக - கல்விச்செருக்குத் தோன்ற.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-01-2019 15:27:52(இந்திய நேரம்)