தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 107 -

இதுவுமது

62. 
முன்னுயி ருருவிற் கேத முயன்றுசெய் பாவந் தன்னா
 
லின்னபல் பிறவி தோறு மிடும்பைக் டொடர்ந்து வந்தோம்
 
மன்னுயிர்க்  கொலையி னாலிம் மன்னன்வாழ் கென்னு
 
[மாற்றம்
 
என்னதாய் விளையு மென்றே நக்கன மெம்மு ளென்றான்.

(இ-ள்.) முன் -இதற்குமுன் (கடந்த பிறவி யொன்றில்), உயிர் உருவிற்கு - உயிருள்ள கோழியைப்போல மாவினாற் செய்த உருவிற்கு, ஏதம் முயன்று  செய்பாவம் -தீங்கு  செய்ய முயன்று பலியிட்ட பாவத்தால், இன்ன - (இதோ இங்கு நிறைந்துள்ள மயில் முதலிய)  இவைகளைப் போன்ற,  பல் பிறவி தோறும் - பலப்பிறப்புக்களிலும் பிறந்து, இடும்பைகள் தொடர்ந்து - (தீவினையால்)  துன்பங்கள் தொடரத் துன்புற்று, வந்தோம்-(பின்  திருவறப்பெருமையால்  இம்மானிடராய்ப்)  பிறந்து வந்தோம்,(மாவினாற் செய்த கோழியைப் பலியிட்ட பழவினையே பல்வேறுவிதப் பிறவிகளிற் பிறந்துழலச் செய்ததெனின்), மன்னுயிர்க் கொலையினால் - எண்ணற்ற உயிர்களைப் பலியிடுவதனால், இம் மன்னன் - இவ் வேந்தன், வாழ்க என்னும் மாற்றம் - வாழ்வானாக என்று கூறுஞ்சொல், என்னது ஆய் விளையும் என்றே - எத்தகைய தீங்கை  விளைவிக்குமோ என்று  நினைத்தே, எம்முள் நக்கனம் - எங்களுக்குள் சிரித்தனம், என்றான் - என்று  அபயருசி கூறினான்.  (எ-று.)

மாக்கோழியின் பலியே பலபிறவித் துன்பத்திற்குக் காரணமாயிற்று; ஆகலின், பஞ்சமாபாதகங்களு ளொன்றாகிய உயிர்க் கொலை புரியும் மன்னன், அத்தீவினைகளால் பலபிறவிக ளடைந்த அல்ல லுழத்தல் திண்ணம், அங்ஙன




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:01:45(இந்திய நேரம்)