தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 
 
குறிப்பு :- "உடையானை யுடையானே! தகுமோ விந்த வொள்ளிழை
யாளுண் மெலிவென் றெடுத்துப் பாட" என்று இவற்றின் கருத்தினை
எடுத்துக்காட்டி யருளினர் ஆசிரியர்.
 
11-ம் திருமுறை:- நம்பியாண்டார் நம்பிகள்
 
"வயலார் மருகற் பதிதன்னில் வாளர வாற்கடியுண்
டயலா விழுந்த வவனுக் கிரங்கி யறிவழிந்த
கயலார் கருங்கண்ணி தன்றுயர் தீர்த்த கருணைவெள்ளப்
புயலார்தருகையினானென்னத் தோன்றிடும் புண்ணியமே"
 

- ஆளு. பிள். - திருவந்தாதி - 49

 
".......தீர்த்தது
தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே"
 

- ஆளு. பிள். - மும்மணிக்கோவை - 4

 
"......வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் போதன்"
 

-மேற்படி - கலம்பகம் - 18

 
"........ மாற்றி யிட்டது வல்விட வாதையே..."
 

- மேற்படி - 41

 
"....... மருகல்விடந் தீர்த்தபிரான்......."
 

- மேற்படி - திருத்தொகை -

 
10. படிக்காசு பெற்றது - (திருவீழிமிழலை)
 
1-ம் திருமுறை:- பிள்ளையார் தேவாரம்
 
 "அடியவர் குழுமிட வவனியி னிகழ்பவர்"
 

- வியாழக்குறிஞ்சி - வீழிமிழலை - 9

 
3-ம் திருமுறை:- மேற்படி
 
".......மற்றுமுள மன்னுயிர்களுக்
கெண்ணிழிவி லின்பநிகழ் வெய்த......"
 

- சாதாரி - வீழி - 3

 
"நண்ணிவரு நாவலர்க ணாடொறும் வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர்.."
 

- மேற்படி - மேற்படி - 6

 
"......அடிக்கன்பர் துன்பிலரே"
 

- ஈரடி - வீழி - 9

 
1-ம் திருமுறை:-
 
"வாசி தீரவே, காசு நல்குவீர், மாசின் மிழலையீ, ரேச லில்லையே" (1)
"கறைகொள் காசினை - முறைமை நல்குமே" (2)
"......மிழலையீர், கரக்கை தவிர்மினே" (8)
 

- குறிஞ்சி - இருக்குக் குறள்

 
7-ம் திருமுறை:- நம்பிகள்
 
"....பரிசினா லடிபோற்று பத்தர்கள்
 பாடியாடப் பரிந்து நல்கினீர்" (5)
".......... இ ருந்துநீர் தமிழோ டிசைகேட்கு
மிச்சையாற் காசுநல்கினீர்....." (8)
 

- சீகாமரம் - வீழி

 
9-ம் திருமுறை :- சேந்தனார்
 
"பாடலங் காரப் பரிசில்கா சருளிப் பழுத்தசெந் தமிழ்மலர் சூடி
நீடலங் காரத் தெம்பெரு மக்க ணெஞ்சுனு ணிறைந்துநின் றானை"
 

திருவிசைப்பா - வீழி.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 18:44:35(இந்திய நேரம்)