திருக்கேதீச்சுரம் - 3856. ஈழுநாட்டுப்பதி. இராமேச்சுரத்தி
லிருந்தபடியே
இதனை வணங்கி வழிபட்டு நம்பிகள் திருப்பதிக மருளினர்.
திருநீலகண்ட யாழ்ப்பாணர் - 4214. அறுபத்துமூன்று நாயன்மார்களுள்
ஒருவர்.
திருநின்றவூர் - 4171. தொண்டை நாட்டிலுள்ள தலம். தின்னனூர்
என
வழங்கும் (இரயில்) நிலயத்தின் அணிமையில் தெற்கில் நாழிகை யளவில் உள்ளது.
தேவார வைப்புத்தலங்களுள் ஒன்று.
திருப்பிடவூர் - 4280. சேரனார் கயிலையில் அரங்கேற்றிய
ஞான வுலாவைக்
கேட்ட மாசாத்தனார் அதனை இப்பதியில் உலகவரறிய வெளிப்படுத்தியருளினர்.
திருப்புக்கொளியூர் - 4232. இது அவிநாசி என வழங்கும்
கொங்கு நாட்டுப்
பதி. நம்பிகள் முதலைவாய்ப் பிள்ளை அழைத்தருளிய அற்புதம் நிகழ்ந்த
பதி.
திருமயிலாபுரி - 4079. மயிலாப்பூர்.
திருமலை - 4266. திருக்கயிலைமலை.
திருமுருகன் பூண்டி - 3911. கொங்கு நாட்டுப் பாடல் பெற்ற
பதிகளுள்
ஒன்று; நம்பிகளது வேடர்பறி அற்புதம் நிகழ்ந்த பதி.
திருமுனைப்பாடி நாடு - 3883. நடு நாட்டின் ஒரு பகுதி;
முனையர் -
முனையதரையர் என்ற சிற்றரசர்களால் ஆளப்பட்டமையால் இப்பெயர் பெற்றது.
திரு
நாவுக்கரசு நாயனாரும் ஆளுடைய நம்பிகளும் அவதரிக்கப்பெற்ற நாடு.
திருவஞ்சைக்களம் - 3748. சேரர் தலைநகரத்தின்
ஒரு பகுதி. நம்பிகளும்
இப்பதியில் வழிபட்டனர். மலைநாட்டில் பாடல் பெற்ற பதி
இஃதொன்றே; நம்பிகளும்
சேரமானாரும் இங்கு நின்றும் முறையே யானைமீதும் குதிரைமீதும்
ஏறிச் சென்று
திருக்கயிலை யடைந்தனர்.
திருவானிலைக் கோயில் - 3959. கருவூரில் உள்ள
திருக்கோயிலின் பெயர்.
திருவுலாப் புறம் - 4275. திருவுலா என்னும் பிரபந்தம்.
திருவொற்றியூர் - 4022. தொண்டை நாட்டில்
20-வது பதி.
தில்லைவாழந்தணர் - 3933. தில்லையில்
இறைவருக்கு அணுக்கத்
தொண்டுரிமை பூண்டோர். இறைவரை யுள்ளிட்டு இவர்கள் தில்லை மூவாயிரவர்
எனப் பெறுவார்கள். இப்போது தீட்சிதர்கள் என்று வழங்கப் பெறுகின்றார்கள்.
தேவாசிரியன் - 3815. திருவாரூரில் கோபுர
வாய்தலினை அடுத்துள்ள
பெருமண்டபம். அடியார்கள் நிறைந்துறைந்துள்ளது. இங்கு நம்பிகள்
திருத்தொண்டத்
தொகை அருளினார்.
தொண்டை நன்னாடு - 4074 - 4022. தொண்டை நாடு; ஆதொண்டைச்
சக்கரவர்த்தியால் ஆளப்பட்டதாற் போந்த பெயர்.
நரசிங்க முனையரையர் - 3982. அறுபத்து மூன்று நாயன்மார்களுள்
ஒருவர்.
நெடுமாறர் - 4068. நின்றசீர் நெடுமாற நாயனார்.
அறுபத்து மூன்று
நாயன்மார்களுள் ஒருவர்.
நெல்வேலிச் செருக்களம் - 4071. திருநெல்வேலிக்
கருகில் நின்றசீர்நெடுமாறர்
வடபுலத்துப் பகைவரை வென்ற போர்க்களம்.
நேசர் - 4191. அறுபத்து மூன்று நாயன்மார்களுள்
ஒருவர்.
பஞ்சவனார் - 4075. பாண்டியர்.
படம்பக்கநாயகர் - 4035. திருவொற்றியூரில்
புற்றுவடிவத்துள் எழுந்தருளிய
திருமூலட்டான நாதர்