ஐங்கணைக்
கிழவன்
-
தாமரை,
மா, முல்லை, அசோகு, நீலோற்பலம்,
ஆகிய ஐந்து பூவையும் தனக்கு அம்பாகக்
கொண்ட மன்மதன்
ஐந்தரு
-
வானுலகிலுள்ள
கற்பகம், அரி சந்தனம்,
பாரிசாதம், மந்தாரம், சந்தானம், என்ற ஐந்து
மரங்கள்
ஐந்தருக்
கடவுள்
-
இந்திரன்
ஐந்திணை
-
குறிஞ்சி,
பாலை, முல்லை, மருதம், நெய்தல்
ஆகிய ஐவகை நிலப் பகுப்பு
ஐந்தினில்
-
தென்புலத்தார்,
தெய்வம், விருந்து, ஒக்கல்,
தான், என்னும் ஐந்திடங்களில்
ஐந்து
அடுக்கிய
ஆறு ஐந்நூறு
-
ஐந்தால்
பெருக்கிய மூவாயிரம், அதாவது
பதினையாயிரம்
ஐந்து
அமர்
கதுப்பு
-
கொண்டை,
குழல், பனிச்சை, முடி, சுருள்,
என்ற ஐவகைப் பகுப்பாகிய கூந்தல்
ஐந்தொழில்
-
படைத்தல்,
காத்தல், அழித்தல், மறைத்தல்,
அருளல்
ஐம்பகை
-
சுவை,
ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், என்னும்
ஐம்புலன்கள் தீய வழியில் செலுவதாலாகிய
பகை
ஐம்பதிற்று
இரட்டி
ஆறுடன் கழித்த
-
தொண்ணூற்று
நான்கு
ஐம்பால்
குழல்
-
ஐந்து
பகுப்பாகிய மயிர் முடி (கொண்டை,
குழல், பனிச்சை, முடி, சுருள்)
ஐவர்
-
தருமன்,
வீமன், அர்ச்சுனன், நகுலன்,
சகாதேவன், என்பவர்கள்