தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-ஐ


ஐங்கணைக்
கிழவன்
-
தாமரை, மா, முல்லை, அசோகு, நீலோற்பலம்,
ஆகிய ஐந்து பூவையும் தனக்கு அம்பாகக்
கொண்ட மன்மதன்
ஐது
-
அழகு
ஐந்தரு
-
வானுலகிலுள்ள கற்பகம், அரி சந்தனம்,
பாரிசாதம், மந்தாரம், சந்தானம், என்ற ஐந்து
மரங்கள்
ஐந்தருக் கடவுள்
-
இந்திரன்
ஐந்திணை
-
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
ஆகிய ஐவகை நிலப் பகுப்பு
ஐந்தினில்
-
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்,
தான், என்னும் ஐந்திடங்களில்
ஐந்து அடுக்கிய
ஆறு ஐந்நூறு
-
ஐந்தால் பெருக்கிய மூவாயிரம், அதாவது
பதினையாயிரம்
ஐந்து அமர்
கதுப்பு
-
கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள்,
என்ற ஐவகைப் பகுப்பாகிய கூந்தல்
ஐந்தொழில்
-
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,
அருளல்
ஐம்பகை
-
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், என்னும்
ஐம்புலன்கள் தீய வழியில் செலுவதாலாகிய
பகை
ஐம்பதிற்று இரட்டி
ஆறுடன் கழித்த
-
தொண்ணூற்று நான்கு
ஐம்பது நூறு
-
ஐயாயிரம்
ஐம்பால் குழல்
-
ஐந்து பகுப்பாகிய மயிர் முடி (கொண்டை,
குழல், பனிச்சை, முடி, சுருள்)
ஐயர்
-
அந்தணர்
ஐயவி
-
வெண்சிறுகடுகு
ஐவர்
-
தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன்,
சகாதேவன், என்பவர்கள்
ஐவாய்
-
பாம்பு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:42:19(இந்திய நேரம்)