Primary tabs
ஆசிரியராகிய சிவஞான முனிவர்க்கு வணக்கம் கூறாமையால் சிவஞான முனிவர் இவர்க்கு ஆசிரியர் என்பது பொருந்தா தென்பர்.
இனி, கச்சியப்ப முனிவர் சிவஞான யோகியார்க்கும் மாணவராயிருந்தமையை அம் மாபெருந் துறவியாகிய சிவஞான யோகியார் சிவத்தோடிரண்டறக் கலந்த காலத்தே அச் சிவஞான முனிவரை இக் கச்சியப்ப முனிவர் மனமுருகி வணங்கிய செய்யுள் ஒன்று விளக்குகின்றது. அதுவருமாறு :-
எனவரும் இக் கையறுநிலைச் செய்யுள் கச்சியப்ப முனிவர் சிவஞான முனிவரை நினைந்தோதியதாம்.
இனி, சிவஞான முனிவரும் நமச்சிவாய மூர்த்திகள்பால் (பின்வேலப்ப தேசிகர்) சமய தீக்கை பெற்றவரே என்பதனை, சிவஞான முனிவரை மதுரையில் நான்காவது தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டித்துரைத்தேவர் புகழ்ந்து பாடிய செய்யுளின் கண் அம்முனிவரை,
எனப் பாராட்டிய அழகிய அன்புச் செய்யுளாலறிக.
இனி, சிவஞான முனிவரும் கச்சியப்ப முனிவரும் அகவை யானும் மிகவும் வேற்றுமையுடையரல்லர். இவ் விரு பெரியோரும் பிறந்த காலம் தேற்றமாகத் தெரிந்து கோடற்கிடமில்லை யாயினும் இவ்விரு பேரொளிப்