தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கடவுள் வாழ்த்து


 
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே

(பதவுரை) ஆத்தி-திருவாத்திப் பூமாலையை, சூடி-தரிப்பவராகிய சிவபெருமான், அமர்ந்த-விரும்பிய, தேவனை-விநாயகக் கடவுளை, யாம்-நாம், ஏத்தி ஏத்தி - வாழ்த்தி வாழ்த்தி, தொழுவோம்-வணங்குவோம்.

(பொழிப்புரை) சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை நாம் பலகாலும் துதித்து வணங்குவோம். விநாயகக் கடவுள் சிவபெருமானுக்கு மூத்த பிள்ளையார் ஆதலின், சிவபெருமான் விரும்பிய தேவன் என்று கூறப்பட்டார். ஏ: ஈற்றசை.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:57:22(இந்திய நேரம்)