தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


கடவுள் வாழ்த்து


பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புதமலர் தலைக்கணி வோமே

(பதவுரை)

பிரணவம் - பிரணவ மந்திரத்தின்; பொருள் ஆம் - அருத்தமாகிய, பெருந்தகை - பெருந்தன்மையுடைய, ஐங்கரன் - ஐந்து கைகளை யுடையவராகிய விநாயகக் கடவுளின், சரணம் - திருவடியாகிய, அற்புதம் - அதிசயமிகுந்த, மலர் - செந்தாமரை மலரை, தலைக்குஅணிவோம் - தலையில் சூடிக்கொள்வோம் என்றவாறு.

(பொழிப்புரை)

பிரணவ மந்திரத்தின் பொருளாகிய விநாயகக்கடவுளின்திருவடிகளைவணங்குவோம் என்றவாறு. பிரணவம் எல்லாமந்திரங்களுக்கும், வேதத்திற்கும் முதலாக வுள்ளது
யாம்என்னும் எழுவாய் தொக்குநின்றது; ஏ : ஈற்றசை


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:00:02(இந்திய நேரம்)