Primary tabs
அருள்வட்ட மாக அறிவு
கதிராய்ப்
பொருள்வட்ட மெல்லாம்
விளக்கி--இருள்வட்டம்
மாற்றும் அறிவான ஞான
வளரொளியான்
வேற்றிலிங் கந்தோன்றும்
வென்று.
1
மாமாங்க மாடல் மணற்குவித்தல்
கல்லிடுதல்
தாமோங் குயர்வரைமேற்
சாவீழ்தல்--காமங்கொண்
டாடோ டெருமை யறுத்தல்
இவையுலக
மூடம் எனவுணரற்
பாற்று.
2
சக்கரன் நான்முகன் சங்கரன்
பூரணன்
புத்தன் கபிலன்
கணாதரனென்--றெத்திறத்
தேகாந்த வாதிக ளெண்கேட்ட
ஆதன்போல்
ஆகாதாம் ஆத்தன்
றுணிவு.
3
கடம்பன்றான் றன்னொடு
காம்படுதோள் வள்ளி
உடம்பினுங் கூட்ட மதுவுவந்து
கேட்பர்
கொடுத்துண்மின் கொண்டொழுக்கங்
காணுமினென்பார்
சொல்
அடுப்பேற்றி யாமைதீந்
தற்று.
4
நன்ஞான நற்காட்சி நல்லொழுக்க
மென்றிவை
தன்னான் முடித்தறா னில்லையேற்
பொன்னேபோல்
ஆவட்டஞ் செய்த வணிகலந்
தேயகிற்போ
லாய்வட்ட நில்லா
துடம்பு.
5
நாலிறகிற் கண்ணில தேயெனினு
நன்பொருளின்
பேரிறையா னுண்பெயரிற்
பிற்சிறக்கு மோரும்
இருகண் னுளதே யெனினு
மதனை
வெருண்டு விலங்காமற்
கா.
6
குறிப்பு : இந்த ஆறு செய்யுட்களும் பொருள் விளங்காமையாற் பிற்சேர்க்கையாக வெளியிடப்பட்டன.