Primary tabs
சொல்லழகுகள் காணப்படுகின்றன. வேண்டுமென்றே வலிய முயன்று தேடி அமைந்த சொல்லலங்காரங்கள் என்று அவற்றைச் சொல்ல முடியாது.
இதுஎன் பைங்கிளி எடுத்த பைங்கிளி
இதுஎன் பூவைக் கினிய சொற் பூவை. - (ஐங்குறுநூறு)
சேர்ந்துடன் செறிந்த குறங்கின் குறங்கென
மால்வரை ஒழுகிய வாழை வாழைப்
பூவெனப் பொலிந்த ஓதி. - (சிறுபாணாற்றுப்படை)
இவ்வாறு சிலசொற்கள் திரும்பவந்து அழகுபெறும் இடங்கள் சங்க இலக்கியத்தில் மிகமிகக் குறைவே. அவைகளும் அலங்காரத்திற்காக வலிந்து அமைக்கப்பட்டவை அல்ல.
இவ்வாறு சொற்கள் மடக்கி வரும் ஒரு சில பாடல்களிலும் அவை உணர்ச்சியான பேச்சின் காரணமாக இயல்பாக வந்து அமைந்தவை என்பதை எளிதில் உணரலாம்.
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்களிலும் சொல் அலங்காரங்கள் குறைவே. சிறிது முயன்று அமைத்த சொல் அலங்காரமாகத் தோன்றும் சில அடிகள் மணிமேகலையில் உள்ளன :