தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   30


 

தவ முயன்றோர்தம்
உடம்பொழித்து உயருல கினிதுபெற் றாங்கே."
                                   ( கலித்.நெய்.21)

இளமை  தீர் திறமாவது , இளமை நீங்கிய திறத்தின்கண் நிகழ்வது
அது   மூவகைப்படும்;    தலைமகன்    முதியனாகித்    தலைமகள்
இளையளாதலும் தலைமகள் முதியளாகித்  தலைமகன் இளையனாதலும்,
இவ்விருவரும் இளமைப் பருவம்  நீங்கியவழி  அறத்தின் மேல் மனம்
நிகழ்தலன்றிக் காமத்தின்மேல் மனம் நிகழ்தலும் என.

உதாரணம்

"உளைத்தவர் கூறும் உரையெல்லாம் நிற்க
முளைத்த முறுவலார்க் கெல்லாம் - விளைத்த
பழங்கள் அனைத்தாய்ப் படுஇளி செய்யும்
முழங்கு புனலூரன் மூப்பு."(புறப். இருபாற் பெருந்திணை.14)

இதனுள் தலைமகன் இளமை தீர் திறம் வந்தவாறு காண்க.

"அரும்பிற்கு முண்டோ அலரது நாற்றம்
பெருந்தோள் விறலி பிணங்கல் - கரும்போடு
அதிரும் புனலூரற்கு ஆரமிழ்தம் - அன்றோ
முதிரும் முலையார் முயக்கு "
                       (புறப்.இருபாற்பெருந்திணை.13)

இதனுள் தலைமகள் இளமை தீர் திறம் வந்தவாறு காண்க.

"ஆண்டலைக் கீன்ற பறழ்மகனே நீயெம்மை
வேண்டுவல் என்று விலக்கினை நின்போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று."        (கலித் மருதம் . 29 )

எனவும்,

" உக்கத்து மேலும் நடுஉயர்ந்து வாய்வாய
கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான்
புக்ககலம் புல்லினெஞ் சூன்றும் புறம்புல்லின்
அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன் அருளீமோ
பக்கத்துப் புல்லச் சிறிது"              (கலித்.மருதம்.29)

எனவும் முறையே தலைமகன் தலைமகள் ஆவார் இருவர் இளமை
தீர் திறம் வந்தவாறு காண்க .

தேறுதல்   ஒழிந்த   காமத்து  மிகுதிறமாவது  : தெளிவு  ஒழிந்த
காமத்தின் கண்ணே மிகுதலும் என்றவறு.

இது பெரும்பான்மை தலைமகட்கே உரித்து,

உதாரணம்

"புரிவுண்ட புணர்ச்சியுள் புல்லாரா மாத்திரை
அருகுவித் தொருவரை அகற்றலில் தெரிவார்கண்
செயநின்ற பண்ணினுள் செவிசுவை கொள்ளாது
நயனின்ற பொருள்கெடப் புரியறு நரம்பினும்
பயனின்று மன்றம்ம காமம் இவள்மன்னும்
ஒண்ணுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்
முள்நுனை தோன்றாமை முறுவல்கொண் டடக்கித்தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண்ணின்றி
யாவரும் தண்குரல் கேட்ப நிரைவெண்பல்
மீயுயர் தோன்ற நகாஅநக் காங்கே
பூவுயிர்த் தன்ன புகழ்சால் எழில்உண்கண்
ஆயிதழ் மல்க அழும் ;

ஓஒ! அழிதகப் பாராதே அல்லல் குறுகினம்
காண்பாம் கனங்குழை பண்பு ;

என்று, எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ
நல்ல நகாஅலிர் மற்கொலோ யானுற்ற
அல்லல் உறீஇயான் மாய மலர்மார்பு
புல்லிப் புணரப் பெறின்;
எல்லாநீ, உற்ற தெவனோமற் றென்றீரேல் எற்சிதை
செய்தான் இவன்என உற்ற திதுவென
எய்த உரைக்கும் உரனகத் துண்டாயின்
பைதல வாகிப் பசக்குவ மன்னோவென்
நெய்தல் மலரன்ன கண்;

கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டாங்கே
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய
காணான் திரிதருங் கொல்லோ மணிமிடற்று
மாண்மலர்க் கொன்றை யவன்;

தெள்ளியேம் என்றுரைத்துத் தேராது ஒருநிலையே
வள்ளியை ஆகென நெஞ்சை வலியுறீஇ
உள்ளி வருகுவர் கொல்லோ உளைந்தியான்
எள்ளி இருக்குவேன் மற்கொலோ நள்ளிருள்
மாந்தர் கடிகொண்ட கங்குற் கனவினால்
தோன்றினன் ஆகத் தொடுத்தேன்மன் யான் தன்னைப்
பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய
கையுளே மாய்ந்தான் கரந்து;

கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி ஆயின்
அவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித்
தருகுவை ஆயின் தவிருமென் நெஞ்சத்து
உயிர் திரியா மாட்டிய தீ;

மையில் சுடரே மலைசேர்தி நீயாயின்
பௌவநீர்த் தோன்றிப் பகல்செய்யு மாத்திரை
கைவிளக் காகக் கதிர்சில தாராய்என்
தொய்யில் சிதைத்தானைத் தேர்கு;

சிதைத்தானைச் செய்வ தெவன்கொலோ எம்மை
நயந்து நலஞ்சிதைத் தான்;

மன்றப் பனைமேல் மலைமாந் தளிரேநீ
தொன்றில் உலகத்துக் கேட்டும் அறிதியோ
மென்றோள் ஞெகிழ்த்தான் தகையல்லால் யான்காணேன்
நன்றுதீ தென்று பிற;

நோயெரி ஆகச் சுடினுஞ் சுழற்றியென்
ஆயிதழ் உள்ளே கரப்பன் கரந்தாங்கே
நோயுறு வெந்நீர் தெளிப்பின் தலைக்கொண்டு
வேவ தளித்திவ் வுலகு.
மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர்
நலிதருங் காமமுங் கௌவையும் என்றிவ்
வலிதின் உயிர்காவாத் தூங்கியாங் கென்னை
நலியும் விழுமம் இரண்டு;

எனப்பாடி,
இனைந்துநொந் தழுதனள் நினைந்துநீடு உயிர்த்தனள்
எல்லையும் இரவும் கழிந்தவென் றெண்ணி எல்லிரா
நல்கிய கேள்வன் இவன்மன்ற மெல்ல
மணியுட் பரந்தநீர் போலத் துணிபாங்
கலஞ்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றுக்
கலங்கிய நீர்போல் தெளிந்து நலம்பெற்றாள்
நல்லெழின்

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:41:52(இந்திய நேரம்)