Primary tabs

என்றக்கால், இளமை பெருமையை நோக்கி நின்றதன்று, கூத்தன்
என்னும் பெயரையே நோக்கி நின்றதென வுணர்க. ‘நடைபெற்று
இயலும்’ எனல் வேண்டா எனின், நடை என்பது
* பரிமாணச் சூத்திரம் -- பிரதிபேதம்.
வழக்கு, வழக்கினுள் மயங்காது வரும் என்பதாம் ; என்னவே,
செய்யுளுள் மயங்க வரும் என்பதாம்.
வரலாறு: *
‘பெருந்தோட் சிறு - மருங்குற்
பேரமர்க்கட் பேதை’
எனவரும். (26)
27. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல.
இச் சூத்திரந் என்னுதலிற்றோவெனின், வழீஇ யமையுமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
உரை: உயர்திணையொருவரைப்
பன்மையாற் சொல்லுதலும்
அஃறிணை ஒன்றினைப் பன்மையாற் சொல்லுதலும் வழக்கினகத்து
உயர்த்துச் சொல்லப்படும் ; இலக்கண முறைமையாற் சொல்லுமிடத்து
நெறியல்ல என்றவாறு,
ஒருவனையும், ‘தாம் வந்தார்’ என்ப.
ஒன்றனையும், ‘தாம் வந்தார்’
என்ப. மற்று, ‘இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல’ எனல்
வேண்டாவாகலால், உயர்திணையை அஃறிணை போலச் சொல்லுதலும்,
அஃறிணையை உயர்திணை போலச் சொல்லுதலும் கொள்க.
வரலாறு: ‘என் பாவை வந்தது,
போயிற்று’ என ஒருத்தியையும்,
‘என் அன்னை
வந்தாள், போயினாள்’ என ஓர் ஆவினையும், காதன்
மிகுதியான் இவ்வாறு கூறுக எனக் கொள்க.
இனி, ‘வழக்கினாகிய’ என்றதனான், ‘கன்னி யெயில், கன்னி ஞாழல்’
என்பன கொள்க. (27)
* யாப்பருங்கல விருத்தி யுரை மேற்கோள்.
நுசுப்பிற்--பாடபேதம்.
28, செலவினும் வாவினுந் தரவினுங் கொடையினும்
நிலைபெறத் தோன்று மந்நாற் சொல்லுந்
தன்மை முன்னிலை படர்க்கை யென்னும்
அம்மூ விடத்து முரிய வென்ப.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இட வழுக்காத்தல் நுதலிற்று.
உரை: செல்லும், வரும்,
தரும் கொடுக்கும் என நிலைபெற்றும்
புலப்பட்டு நின்ற இந் நான்கு சொல்லும் தன்மை, முன்னிலை,
படர்க்கை என்னும் மூன்றிடத்திற்கும் உரிய என்றவாறு.
அவையாமாறு முன்னர்ச் சொல்லுதும். (28)
29. அவற்றுள்
தருசொல்