தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1175


என்பது, என்றவாறு.  

அவைதாம் பெண்ணொழி மிகுசொல்லும், ஆணொழி மிகுசொல்லும்
என இருவகைப்படும். 

வரலாறு : 

உயர்திணைக்கண்  பெயரிற்   பிரிந்த   பெண்ணொழி   மிகுசொல்
வருமாறு: ‘வடுகரசர் ஆயிரவர் மக்களை யுடையர்’ எனவரும்.
 

அத்திணைக்கண்  பெயரிற் பிரிந்த ஆணொழி மிகுசொல் வருமாறு:
‘பெருந்தேவி  பொறையுயிர்த்த  கட்டிற்கண்  நால்வர்  மக்கள்  உளர்’
எனவரும். 

இனி, அத்திணைக்கண் தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல்
வருமாறு: ‘அரசர் ஆயிர மக்களொடு தாவடிபோயினார்’ எனவரும். 

அத்திணைக்கண்   தொழிலிற்   பிரிந்த   ஆணொழி  மிகுசொல்
வருமாறு; ‘இன்று இவ்வூரெல்லாம் தைநீர் ஆடுப’ எனவரும். 

இனி,   அஃறிணைக்கண்   வருமாறு   :   ‘நம்மரசன்   ஆயிரம்
யானையுடையன்’ என வரும். 

இஃது அத் திணையிற் பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகு சொல்: 

‘நம்பி நூறு எருமை யுடையன்’ என வரும்; இஃது அத் திணையிற்
பெயரிற்பிரிந்த ஆணொழி மிகுசொல். 

இனி,  அத்  திணைக்கண்  தொழிலிற்பிரிந்து  வருமாறு : ‘இன்று
இவ்வூர்ப் பெற்ற  மெல்லாம் உழவொழிந்தன’ என வரும்; இஃது அத்
திணைக்கண் தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல். 

‘இன்று  இவ்வூர்ப் பெற்றமெல்லாம் அறங்  கறக்கும்’ என  வரும்;
இஃது அத் திணைக்கண் தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல். 

இனி,   ‘எல்லாம்’   என்றதனால்,   ஆணொழி  மிகு  சொல்லும்,
பெண்ணொழி  மிகுசொல்லும்  அன்றிச்  சிறப்புப்  பற்றி  நிற்பனவும்,
பொதுவாய்  நிற்பனவும், மிகுதி வகையான் நிற்பனவும் கொள்க. அவை
வருமாறு : 

‘அரசர் பெருந்தெரு’ என்பது சிறப்புப் பற்றி வந்தது. 

‘ஆ தீண்டு குற்றி’ ‘ஆனதர்’ என்பன பொதுவாய் நிற்பன. 

இனி,  மிகுதிவகையாற்  சொல்லுவன  வருமாறு : ‘இவர் பெரிதுங்
கால்கொண் டோடுப’  --  ‘இவர்  பெரிதுஞ்  சோறுண்ப’  எனவரும்
உயர்திணைக்கண்.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:15:47(இந்திய நேரம்)