தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   521


பல பொருள் ஒரு சொல், எ-று. (52) 

வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல்

53. அவற்றுள்,
வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்
வேறுபடு வினையினும் இனத்தினுஞ் சார்பினுந்
தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே.
 

(இ-ள்.)  இஃது   அவற்றுள்   வினை  வேறுபடுமாறு கூறுகின்றது.
அவற்றுள்   வினை    வேறுபடூஉம்   பலபொருள்   ஒரு   சொல் -
அவ்விரண்டனுள்ளும்  வினையான்  வேறுபடும் பலபொருள் ஒருசொல்,
வேறுபடு  வினையினும் இனத்தினும் சார்பினும்-ஒரு பொருட்கே சிறந்த
வினையானும்  இனத்தானுஞ்  சார்பானும்,  பொருள் தெரிநிலை தேறத்
தோன்றும்-பொருள்  தெரி நிலைமைக்கண் பொதுமை நீங்கித் தெளியத்
தோன்றும், எ-று. 

‘மா’ என்பது,  ஒரு சார் விலங்கிற்கும் மரத்திற்கும் வண்டிற்கும் பிற
பொருட்கும்   பொது.   ‘குருகு’   என்பது,  ஒரு  பறவைக்கும் உலை
மூக்கிற்கும் வளைக்கும் பிற பொருட்கும் பொது. 

‘மா பூத்தது.’- இது வினை.

‘மாவும் மருதும் ஓங்கின.’- இஃது இனம்.

கவசம் புக்கு நின்று, ‘மாக்கொணா’ என்பது சார்பு. 

ஒரு    சாதிக்கண்   அணைந்த   சாதி,   இனம்;   ஒருவாற்றான்
இயைபுடையது சார்பு. 

‘ஒன்றென முடித்தல்’  என்பதனான், ‘இம்மா வயிரம், வெளிறு,’ என
வேறுபடுக்கும் பெயருங் கொள்க. 

‘கழிப்பூக் குற்றும் கானல் அல்கியும்’       (அகம்.330 : 1) 

என்றாற்போலச்  சில  பொருளை ஒழித்துச் சில பொருள் மேல் நிற்றல்
உரையிற்கொள்க. 

இனமுஞ் சார்பும் பின்வரும் வினையொடு கூடி அல்ல
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:22:18(இந்திய நேரம்)