தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   562


மைப்பொருட்கண் தோன்றுஞ் சொல் எல்லாம், ஆறன் பால என்மனார்
புலவர் - ஆறாம்  வேற்றுமைத்   திறத்தன   என்று  கூறுவர் புலவர்,
எ-று. 

(எ-டு.) 1. எண்ணது குப்பை-இஃது, ஒன்றுபல குழீஇய தற்கிழமை. 2.
படையது  குழாம்  - இது, வேறு பல குழீஇய தற்கிழமை. 3. சாத்தனது
இயற்கை,  நிலத்தது அகலம் - இவை இயற்கைக் கிழமை. 4. சாத்தனது
நிலைமை,  சாத்தனது  இல்லாமை-இவை  நிலைக்கிழமை. இந்நான்கும்
ஒன்றியற்கிழமை. 

ஒரு பொருளின் ஏகதேசம் என்று அறிவித்தற்கு ‘ஒரு வழி உறுப்பு’
என்றார். அவை யானையது கோடு, புலியது உகிர் - இவை உறுப்பின்
கிழமை. 

செயற்கையாவது,  தன் தன்மை திரிந்து வேறொரு தன்மை ஆதல்;
அவை  சாத்தனது  செயற்கை, சாத்தனது கற்றறிவு. முதுமைக் கிழமை:
அரசனது  முதுமை, அரசனது  முதிர்வு.  இஃது  அறிவின்  முதிர்ச்சி
என்பது   அறிவித்தற்கு  இளமை  கூறாராயினார்.  வினைக்  கிழமை:
சாத்தனது  வினை, சாத்தனது  செலவு.  இவை,  மெய்  திரிந்து ஆய
தற்கிழமை.   உடைமைக்  கிழமை:  சாத்தனது  உடைமை,  சாத்தனது
தோட்டம்.  முறைமைக்  கிழமை: மறியதுதாய், மறியது தந்தை. கருவிக்
கிழமை:  இசையது  கருவி,  வனை  கலத்தது திகிரி. துணைக் கிழமை:
அவனது துணை, அவனது இணங்கு. கலமாவது, 

ஓலை. நிலத்தது ஒற்றிக்கலம், சாத்தனது விலைத் தீட்டு. இஃது, இரு
பொருட்கு உரிமை உடைமையின், உடைமையின் வேறாயிற்று. 

முதற்கிழமை: ஒற்றியது முதல், ஒ
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:29:56(இந்திய நேரம்)