Primary tabs

(இ-ள்)
இருவகைப்பிரிவும் நிலைபெறத் தோன்றினும் - நான்கு
வருணத்தார்க்குங் காலிற் பிரிவும் வேளாளர்க்குத் கலத்திற் பிரிவுந்
தத்தம் நிலைமைக்கேற்பத் தோன்றினும்; உரியது ஆகும் என்மனார்
புலவர் - பின்பனிக்காலம் அவ்விரண்டற்கும் உரிமைபூண்டு
நிற்குமென்று கூறுவர் புலவர் எ-று.
கடலினை நிலமென்னாமையிற் கலத்திற் பிரிவு முன்பகுத்த
நிலத்துள் அடங்காதென்று, அதுவும் அடங்குதற்கு ‘இரு வகைப்
பிரிவும்’
என்னும் முற்றும்மை கொடுத்துக், காலிற் பிரிவொடு கூட்டிக்
கூறினார்.
கலத்திற் பிரிவு அந்தணர் முதலிய செந்தீவாழ்நர்க்கு
ஆகாமையின்
வேளாளர்க்கே உரித்தென்றார். வேத வணிக ரல்லாதார்
கலத்திற் பிரிவு வேதநெறி யன்மையின் ஆராய்ச்சியின்று.
இக்கருத்தானே இருவகை வேனிலும் நண்பகலும் இருவகைப்
பிரிவிற்கும் ஒப்ப உரியவன்றிக் காலிற் பிரிவுக்குச் சிறத்தலுங், கலத்திற்
பிரிவிற்கு
இளவேனி லொன்றுங் காற்றுமிகாத முற்பக்கத்துச்
சிறுவரவிற்றாய்
வருதலுங் கொள்க. ஒழிந்த உரிப்பொருள்களினும்
பாலை இடை
நிகழுமென்றலிற் பிரிய வேண்டிய வழி அவற்றிற்கு
ஓதிய காலங்கள் கலத்திற் பிரிவிற்கு வந்தாலும் இழுக்கின்று. என்னை?
கார்காலத்துக்
கலத்திற்பிரிவும் உலகியலாய்ப் பாடலுட் பயின்று
வருமாயினென்க. தோன்றினும் என்ற உம்மை சிறப்பும்மை; இரண்டு
பிரி