தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3210


என்றது,  முன்னர்க் குறிஞ்சி பாலைக்குரிய இருவகை வேனிற்கண்
நிகழ்ந்தாற் போல இவையும் இருவகை வேனிற்கண் நிகழுமென்றவாறு.
மழைகூர்   காலத்துப்   புறம்  போந்து  விளையாடு  தலின்மையின்
எதிர்ப்பட்டுப்   புணர்தல்   அரிதாகலானும்,   அதுதான்   இன்பஞ்
செய்யாமையானும்  இருவகை  வேனிற் காலத்தும் இயற்கைப்புணர்ச்சி
நிகழுமென்று இச்சூத்திரம்.

முன்னர்க்   கூதிரும்   யாமமும்   முன்பனியுஞ்  சிறந்ததென்றது,
இயற்கைப்புணர்ச்சிப்    பின்னர்க்    களவொழுக்கம்    நிகழ்தற்குக்
காலமென்றுணர்க.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:48:22(இந்திய நேரம்)