தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   125


    1 உயர்திணை என்மனார், மக்கட் சுட்டே;
    அஃறிணை என்மனார், அவர் அல பிறவே;
    ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே.

    2. ஆடூஉ அறி சொல் மகடூஉ அறி சொல்
    பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி
    அம் முப் பாற்சொல் உயர்திணையவ்வே.

    3 ஒன்று அறி சொல்லே பல அறி சொல் என்று
    ஆயிரு பாற் சொல் அஃறிணையவ்வே.

    4 பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
    ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்,
    தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்,
    இவ் என அறியும் அந்தம் தமக்கு இலவே
    உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும்.

    5 னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல்.

    6 ளஃகான் ஒற்றே மகடூஉ அறி சொல்.

    7 ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்,
    மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
    நேரத்தோன்றும் பலர் அறிசொல்லே.

    8 ஒன்று அறி கிளவி த, ற, ட, ஊர்ந்த,
    குன்றிய லுகரத்து இறுதி ஆகும்.

    9 அ, ஆ, வ, என வரூஉம் இறுதி
    அப்பால் மூன்றே பலஅறி சொல்லே.

    10 இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய,
    ஈற்றின் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும்
    தோற்றம் தாமே வினை

      

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:26:46(இந்திய நேரம்)