Primary tabs
-
பெருங்கதைஉ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
யொடு போயின னுதயணன்
இல்லெனக் கெழுபகை யிம்மையி னினியென
மாற்று வேந்தன் மதில்காப் பிகந்துதன்
ஆற்றன் மகிழ்ந்த வந்நிலை யொற்றி
மகத மன்னனொடு மகட்கிளை யாகித்
தொகைகொண்டீண்டியவன் றொல்படை தழீஇ
ஆதித் துணிவுடை நீதியிற் கரந்த
தம்பியர் கூட வெம்பிய வெகுட்சியின்
ஒருங்கா மாந்த ருள்ள மஞ்சப்
பாடுபெயர்ந் திடிக்கு மேடகம் போல
அகன்றுபெயர்ந் தழிக்கு மரும்பெறற் சூழ்ச்சி
நவின்ற தோழனொடு பயம்பட வலித்து
மதியுடை யமைச்சர் மனந்தெளி வுறீஇப்
புதிதிற் கொண்ட பூக்கவின் வேழம்
பணிசெயப் பிணிக்கும் பாகர் போல
நீதி யாள ராதி யாகிய
திறத்திற் காட்டவு மறத்தகை யழுங்கி
முன்னுப காரத்து நன்னயம் பேணித்
தன்னுயிர் கொடுக்குந் தவமுது தாயும்
விறப்பினிற் பெருகியும் வறப்பினிற் சுருங்கியும்
உறுதி நோக்கி யுயிர்புரை காதலோ
டாழ்விடத் துதவு மரும்புணை போலத்
தாழ்விடைத் தாங்கிச் சூழ்விடைத் துளங்கா
உள்ள வாற்ற லுறுபுகழ் யூகியும்
அள்ளற்றாமரை யகவித ழன்ன
அரிபரந் தகன்ற வம்மலர் நெடுங்கட்
டெரிமலர்க் கோதைத் தேவியு மின்றித்
தருமமு மருத்தமுங் காமமு மிழந்தே
இருநில மருங்கி னிறைமை தாங்கி
வாழ்தலி னினிதே யாழ்தலென் றழிந்தே
உரக்கவின் றேய விரக்கமொ டரற்றவும்
கைவரை நில்லாக் கையறு கவற்சிகண்
டின்மொழி விச்சை யிலாமய னென்னும்
ஆளவி நெஞ்சத் தந்தண னிருந்த
காள வனமும் வெந்தீப் புக்கெனக்
காவலன் றன்னையுஞ் சாவற லுறீஇ
மயக்க நெஞ்சமொடு மனம்வலித் திருந்துழி
இசைச்சன் கூறுவ னீங்கிது கேட்கென
விச்சையின் முடியா விழுவினை யில்லெனல்
பொ