தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   247


     

    ய்ச்சொ லென்பர் புன்மை யோரே
    அற்ற தாக லிற்றுங் கூறுவென்
    கற்றதுங் கேட்டதுங் கண்ணா மாந்தர்க்
    கொற்கிடத் துதவு முறுவலி யாவது
    பொய்ப்பது போலு நம்முதற் றாகப்
    பற்றொடு பழகி யற்பழ லழுந்தி
    முடிவது நம்மைக் கடிவோ ரில்லை
    இல்லை யாதலிற் சொல்லுவ லின்னும்
    முடியாக் கரும மாயினு முடியும்
    வாயின் முற்றித்து வயங்கா தாயினும்
    சாவினும் பழியார் சால்புடை யோரென
    மல்லற்றானை மறங்கெழு மன்னவன்
    செல்வப் பாவை சென்றினிது பிறந்துழி
    இம்மை யாக்கையி னியல்பின ளாகத்
    தன்மையிற் றரூஉந் தாழாப் பெருவினை
    உட்குடை விச்சை யொன்றுண் டதனைக்
    கற்றுநனி நவின்ற கடனறி யந்தணன்
    இருந்தினி துறையு மிராச கிரியெனும்
    பொருந்தரு வியனகர்ப் புக்கவற் குறுகி
    ஆற்றுளி வழிபா டாற்றி யமைச்சனொடு
    பூக்குழை மாதரை மீட்டனங் கொண்டு
    பெறற்கரு விச்சையுங் கற்று நாமெனத்
    திறற்படு கிளவி தெரிந்தவ னுரைப்ப
    விறற்போ ருதயணன் விரும்புபு விதும்பி
    என்னே யன்னவு முளவோ வென்றலின்
    வேட்டதன் வழியே பாற்பட நாடி
    ஆதி வேதத் தகவயிற் பெரியோர்
    ஓதிய வுண்டென வுணரக்கூற
    இன்னே போது மேகுமின் விரைந்தெனப்
    பள்ளம் படரும் பன்னீர்போலவன்
    உள்ளம் படர்வழி யுவப்பக் காட்டிக்
    கணம்புரி பெரும்படைக் காவ னீக்கிக்
    குணம்புரி தோழர் கொண்டனர் போதர
    ஆற்றலும் விச்சையு மறிவு மமைந்தோர்
    நூற்றுவர் முற்றி வேற்றுந ராகென
    வெண்ணூற் பூந்துகில் வண்ணங் கொளீஇ
    நீலக் கட்டியு மரகதத் தகவையும்
    பாசிலைக் கட்டியும் பீதகப் பிண்டமும்
    கோல மாகக் கொண்டுகூட் டமைத்துப்
    பிடித்துருக் கொளீஇக்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:51:53(இந்திய நேரம்)