தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   248


     

    கொடித்திரி யோட்டிக்
    கையமைத் தியற்றிய கலிங்கத் துணியினர்
    கொய்யுளைப் புரவி மேற்கொண் டவரிற்
    கைவினைக் கம்மங் காண்பினி தாக
    வாரமைத் தியற்றிய காலமை செருப்பினர்
    செம்பொற் கொட்டைப் பந்தர்க் கொளுவினர்
    மாத்திரை நுண்கயிற் றாத்திரை யாப்பினர்
    உள்கூட் டமைந்த சில்கூட் டல்குலர்
    இரும்பனை யிளமடல் விரிந்துளர் வெண்டோட்
    டீர்க்கிடை யாத்த நூற்புரிப் பந்தச்
    செந்தோட் டணிமலர் சேர்ந்த வுச்சி
    அந்தோட் டம்பணை யரக்குவினை யுறீஇய
    சித்திரத் திண்கால் வித்தகக் குடையினர்
    மரகத மணிக்கை மாசில் பொற்றொடி
    உருவுபடச் செறித்த வுரோமக் கொட்டையிற்
    செந்தளிர் மராஅத்துப் பைங்காய் பழித்த
    செண்ணார் வடிவிற் கண்ணார் கத்தியர்
    ஏரில வங்கந் தீம்பூ வேலம்
    கப்புரப் பளிதமொடுட்படுத் தியற்றிய
    வாசத் திரையொடு பாகுநிறைத் தடக்கிய
    மாசிலருமணிமடைத்த வாடையர்
    பட்டுச் சுவேகமொடு பாட்டுப்புற மெழுதிய
    கட்டமை சுவடி பற்றிய கையினர்
    புரிநூலணிந்த பொன்வரை மார்பினர்
    விரிநூற் கிரந்தம் விளம்பிய நாவினர்
    வாச வெள்ளை வரைந்த கழுத்தினர்
    தேசந் திரிதற் காகிய வணியொடு
    வளங்கெழு மாமலை வன்புன் றாளக
    நலங்கெழு சிறப்பி னாட்டக நீந்திப்
    பைந்தொடி யரிவைக்குப் படுகடங் கழீஇய
    கண்புரை யந்தணன் காள வனத்தினின்
    றுதய ஞாயிற்றுத் திசைமுக நோக்கித்
    திருமகட் டேரு மொருமையிற் போந்து
    கருப்பாச மென்னுங் கானக் கான்யாற்றுப்
    பொரும்புன னீத்தம் புணையிற் போகிச்
    சேணிடைப் போகிய பின்றை யப்பால்
    நீணிலைப் படுவிற் பேர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:52:05(இந்திய நேரம்)