Primary tabs
-
பெருங்கதைஉ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
கொடித்திரி யோட்டிக்
கையமைத் தியற்றிய கலிங்கத் துணியினர்
கொய்யுளைப் புரவி மேற்கொண் டவரிற்
கைவினைக் கம்மங் காண்பினி தாக
வாரமைத் தியற்றிய காலமை செருப்பினர்
செம்பொற் கொட்டைப் பந்தர்க் கொளுவினர்
மாத்திரை நுண்கயிற் றாத்திரை யாப்பினர்
உள்கூட் டமைந்த சில்கூட் டல்குலர்
இரும்பனை யிளமடல் விரிந்துளர் வெண்டோட்
டீர்க்கிடை யாத்த நூற்புரிப் பந்தச்
செந்தோட் டணிமலர் சேர்ந்த வுச்சி
அந்தோட் டம்பணை யரக்குவினை யுறீஇய
சித்திரத் திண்கால் வித்தகக் குடையினர்
மரகத மணிக்கை மாசில் பொற்றொடி
உருவுபடச் செறித்த வுரோமக் கொட்டையிற்
செந்தளிர் மராஅத்துப் பைங்காய் பழித்த
செண்ணார் வடிவிற் கண்ணார் கத்தியர்
ஏரில வங்கந் தீம்பூ வேலம்
கப்புரப் பளிதமொடுட்படுத் தியற்றிய
வாசத் திரையொடு பாகுநிறைத் தடக்கிய
மாசிலருமணிமடைத்த வாடையர்
பட்டுச் சுவேகமொடு பாட்டுப்புற மெழுதிய
கட்டமை சுவடி பற்றிய கையினர்
புரிநூலணிந்த பொன்வரை மார்பினர்
விரிநூற் கிரந்தம் விளம்பிய நாவினர்
வாச வெள்ளை வரைந்த கழுத்தினர்
தேசந் திரிதற் காகிய வணியொடு
வளங்கெழு மாமலை வன்புன் றாளக
நலங்கெழு சிறப்பி னாட்டக நீந்திப்
பைந்தொடி யரிவைக்குப் படுகடங் கழீஇய
கண்புரை யந்தணன் காள வனத்தினின்
றுதய ஞாயிற்றுத் திசைமுக நோக்கித்
திருமகட் டேரு மொருமையிற் போந்து
கருப்பாச மென்னுங் கானக் கான்யாற்றுப்
பொரும்புன னீத்தம் புணையிற் போகிச்
சேணிடைப் போகிய பின்றை யப்பால்
நீணிலைப் படுவிற் பேர்