தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   249


     

    புணை நீந்தி
    நொந்துநொந் தழியு நோன்புபுரி யாக்கையர்
    அருஞ்சுரக் கவலையு மடவியும் யாறும்
    பெருஞ்சின வீர ரொருங்குடன் பேர்வுழி
    வென்றடு சிறப்பின் வீணை வித்தகன்
    ஒன்றிய தேவியை யுள்குவன னாகிச்
    செறிந்த மருங்கிற் றிரிமருப் பிரலை
    புறந்தற் காப்பப் புணர்மறி தழீஇய
    மடமா னம்பிணை கண்டுமாதர்
    கடைபோழ் நெடுங்கட் காம நோக்கம்
    உள்ளத் தீர வொள்ளழ லுயிரா
    இனத்திற் கெழீஇ யின்ப மகிழ்ச்சியொடு
    புனத்திற் போகாது புகன்றுவிளை யாடும்
    மான்மடப் பிணையே வயங்கழற் பட்ட
    தேனேர் கிளவி சென்ற வுலகம்
    அறிதி யாயின் யாமு மங்கே
    குறுகச் செல்கங் கூறா யெனவும்
    பணிவரை மருங்கிற் பாறை தோறும்
    மணியிரும் பீலி மல்க வுளரி
    அரும்பெற லிரும்போத் தச்சங் காப்ப
    மதநடை கற்கு மாமயிற் பேடாய்
    சிதிர்மலர்க் கூந்தற் செந்தீக் கவர
    மயர்வனள் விளிந்தவென் வஞ்சி மருங்குல்
    மாறிப் பிறந்துழி மதியி னாடிக்
    கூறிற் குற்ற முண்டோ வெனவும்
    வெஞ்சுரஞ் செல்வோர் வினைவழி யஞ்சப்
    பஞ்சுர வோசையிற் பையெனப் பயிரும்
    வெண்சிறைச் செங்கா னுண்பொறிப் புறவே
    நுண்சிறு மருங்கு னுகர்வின் சாயற்
    பாசப் பாண்டிற் பல்கா ழல்குலென்
    வாசவ தத்தை யுள்வழி யறியின்
    ஆசை தீர வவ்வழி யடைகேன்
    உணரக் கூறா யாயிற் பெடையொடு
    புணர்வு விரும்பல் பொல்லா தெனவும்
    பசைந்துழிப் பழகல் செல்லாது பற்றுவிட்
    டுவந்துழித் தவிரா தோடுதல் காமுறும்
    இளையோ ருள்ளம் போலத் தளையவிழ்ந்
    தூதுமல ரொழியத் தாதுபெற நயந்து
    கார்ப்புன மருங்கி னார்த்தனை திரிதரும்
    அஞ்சிறை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:52:17(இந்திய நேரம்)