தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   250


     

    யறுகாற் செம்பொறி வண்டே
    எரியுள் விளிந்தவென் வரிவளைப் பணைத்தோள்
    வள்ளிதழ்க் கோதை யுள்ளுழி யுணரிற்
    கவற்சி வகையிற்பெயர்த்தனை களைஇயர்
    அரும்பூங் கோதைப் பூந்தா துண்டவள்
    அவிழ்பூங் கூந்தலுண் மகிழ்துயில் வெய்தி
    நீயு மெவ்வந் தீர யானும்
    நல்லிள வனமுலை புல்லுபு பொருந்த
    உய்த்தனை காட்டுதி யாயிற் கைம்மா
    றித்துணை யென்பதொன் றில்லென விரங்கியும்
    பொங்குமழை தவழும் பொதியின் மீமிசைச்
    சந்தனச் சோலைதொறுந் தலைச்சென் றாடி
    அசும்பிவ ரடைகரைப் பசுந்தோ டுளரிச்
    சுள்ளிவெண் போது சுரும்புண விரித்து
    மணிவாய் நீலத் தணிமுகை யலர்த்தி
    ஒண்பூங் காந்த ளுழக்கிச் சந்தனத்
    தந்த ணறுமல ரவிழ மலர்த்தி
    நறுங்கூ தாளத்து நாண்மல ரளைஇக்
    குறுந்தாட் குரவின் குவிமுகை தொலைச்சி
    முல்லைப் போதி னுள்ளமிழ் துணாஅப்
    பல்பிட வத்துப் பனிமலர் மறுகிப்
    பொற்றார்க் கொன்றை நற்றாது நயந்து
    சாத்துவினைக் கம்மியன் கூட்டுவினை யமைத்துப்
    பல்லுறுப் படக்கிய பையகங் கமழ
    எல்லுறு மாலை யிமயத் துயர்வரை
    அல்குதற் கெழுந்த வந்தண் டென்றால்
    செவ்வழித் தீந்தொடை சிதைந்தன கிளவியென்
    எல்வளைத் தோளியை யெவ்வழி யானும்
    நாடிச் சென்றவள் சேடிள வனமுலைக்
    குழங்கற் சாந்திடைக் குளித்துவிளை யாடியென்
    அழுங்க னெஞ்சத் தயாஅநோய் தீர
    மயர்வெனை மாற்றுதி யாயி னின்மாட்
    டுயர்வுள வியற்கை யொழியுமோ வெனவும்
    இன்னவை பிறவு மன்னவை கண்டோர்
    அவல

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:52:30(இந்திய நேரம்)