தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   266


     

    மன்னவன் மடமகள் பின்னொழிந் திறக்கும்
    ஏந்திள வனமுலை யெழில்வளைப் பணைத்தோள்
    மாந்தளிர் மேனி மடமா னோக்கின்
    ஆய்ந்த கோலத் தயிரா பதியெனும்
    கூன்மட மகடனைக் கோமகன் குறுகி
    யாவளிந் நங்கை யாதிவண் மெய்ப்பெயர்
    காவலர் கொள்ளுங் காவினுள் வந்த
    காரண மென்னை கருமமுண் டெனினும்
    கூறினை செல்லிற் குற்றமில்லென
    மாறடு குருசில் வேறிடை வினவ
    அந்த ணாள னரும்பொரு ணசையின்
    வந்தன னென்னும் வலிப்பினளாகி
    இன்பங் கலந்த விந்நகர்க் கிறைவன்
    தன்பெரு மாட்டி தலைப்பெருந் தேவி
    சிதைவில் கற்பிற் சிவமதி யென்னும்
    பேருடை மாதர்க் கோரிடம் பிறந்த
    உதையை யோடை யென்னு மொண்டொடி
    காசி யரசன் காதலி மற்றவள்
    ஆசின்று பயந்த வணியிழைக் குறுமகள்
    . மதுநாறு தெரியன் மகளிருட் பொலிந்த
    பதுமா பதியெனப் பகர்ந்த பேரினள்
    துன்னருஞ் சிறப்பிற் கன்னி தானும்
    வயந்தக் கிழவற்கு நயந்துநகர் கொண்ட
    விழவணி நாளகத் தழகணி காட்டி
    எழுநாள் கழிந்த வழிநாட் காலை
    வேதியர்க் கெல்லாம் வேண்டுவ கொடுக்கும்
    போதல் வேண்டா பொருட்குறை வுண்டெனின்
    ஏதமில்லையிவணி ராமினென்
    றிந்நாட் டாரலி ரேனையர் போல்வீர்
    எந்நாட் டெவ்வூ ரெக்கோத் திரத்தீர்
    யாமு நும்மை யறியப் போமோ
    வாய்மை யாக மறையா துரைமினென்
    றேயர் குருசிலைத் தூய்மொழி வினவ
    நன்றான் மற்றது கேளாய் நன்னுதல்
    கண்டார் புகழுங் கலக்கமில் சிறப்பிற்
    காந்தார மென்னு மாய்ந்த நாட்டகத்
    தீண்டிய பல்புக ழிரத்தின புரத்துள்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:55:47(இந்திய நேரம்)