தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

  • வசம்பு
    (Acorus calamus)

    முனைவர் மரு.பெ.பாரதஜோதி
    இணைப்பேராசிரியர்
    சித்த மருத்துவத்துறை

    - வசம்பு சுட்ட கரியுடன், அதிமதுரப் பொடி கலந்து கொடுத்து வர குழந்தைகளின் இருமல், காய்ச்சல், வயிற்று வலி தீரும்.

    - வசம்பு சுட்ட கரியுடன் தேய்காய் எண்ணெய் கலந்து அடிவயிற்றில் பூசி வந்தால் வயிற்றுவலி தீரும்.

    - வசம்புத் தூளைத் தேனில் குழைத்து காலையில் உட்கொள்ள நாக்குப் பிறழ்ச்சி (திக்குவாய்) தீரும்.

    - வசம்பு ஊறல் குடிநீர் 15 மி.லி கொடுக்க, செரிமானமின்மை, வயிற்றுப் பொருமல் தீரும். ஊழி நோயால் (Cholera) உண்டாகும் கழிச்சலுக்குச் சிறந்த மருந்தாகும்.

    - வசம்புப் பொடியை 150 மி.கி அளவு உட்கொண்டு வந்தால் நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.

    - வசம்புடன் காய்ச்சுக் கட்டியை நீர் விட்டு அரைத்துப் பற்றிட நாட்பட்ட கீல்வாத நோய்கள் தீரும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:59:53(இந்திய நேரம்)