முகப்பு |
நெய்தல் |
8. குறிஞ்சி |
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண், |
||
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல், |
||
திரு மணி புரையும் மேனி மடவோள் |
||
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்! |
||
5 |
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5 |
|
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும் |
||
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள் |
||
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் |
||
திண் தேர்ப் பொறையன் தொண்டி- |
||
10 |
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! | உரை |
இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன்சொல்லியது.
|
27. நெய்தல் |
நீயும் யானும், நெருநல், பூவின் |
||
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி, |
||
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக் |
||
கழி சூழ் கானல் ஆடியது அன்றி, |
||
5 |
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின், |
|
பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே-நன்றும் |
||
எவன் குறித்தனள் கொல், அன்னை?-கயந்தோறு |
||
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம் |
||
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி, |
||
10 |
கண் போல் பூத்தமை கண்டு, 'நுண் பல |
|
சிறு பாசடைய நெய்தல் |
||
குறுமோ, சென்று' எனக் கூறாதோளே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-குடவாயிற் கீரத்தனார்
|
78. நெய்தல் |
கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி |
||
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய, |
||
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம், |
||
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல், |
||
5 |
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை, |
|
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்; |
||
கேட்டிசின்-வாழி, தோழி!-தெண் கழி |
||
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும், |
||
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா |
||
10 |
வலவன் கோல் உற அறியா, |
|
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே! | உரை | |
வரைவு மலிந்தது.-கீரங்கீரனார்
|
113. பாலை |
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப் |
||
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய் |
||
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம் |
||
பெருங் காடு இறந்தும், எய்த வந்தனவால்- |
||
5 |
'அருஞ் செயல் பொருட் பிணி முன்னி, யாமே |
|
சேறும், மடந்தை!' என்றலின், தான் தன் |
||
நெய்தல் உண்கண் பைதல் கூர, |
||
பின் இருங் கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து, |
||
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் |
||
10 |
இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும் |
|
ஆம்பல்அம் குழலின் ஏங்கி, |
||
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே! | உரை | |
இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது.-இளங்கீரனார்
|
117. நெய்தல் |
பெருங் கடல் முழங்க, கானல் மலர, |
||
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, |
||
வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன் |
||
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர, |
||
5 |
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம் |
|
கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க, |
||
புலம்பொடு வந்த புன்கண் மாலை |
||
அன்னர் உன்னார் கழியின், பல் நாள் |
||
வாழலென்-வாழி, தோழி!-என்கண் |
||
10 |
பிணி பிறிதாகக் கூறுவர்; |
|
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே. | உரை | |
வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது; சிறைப்புறமும்ஆம்.-குன்றியனார்
|
138. நெய்தல் |
உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை |
||
மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை, |
||
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த |
||
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும் |
||
5 |
தண்ணம் துறைவன், முன் நாள், நம்மொடு |
|
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல் |
||
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ, |
||
கண் அறிவுடைமை அல்லது, நுண் வினை |
||
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் |
||
10 |
முழங்கு திரை இன் சீர் தூங்கும் |
|
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே. | உரை | |
'அலர் ஆயிற்று' என ஆற்றாளாய தலைமகட்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-அம்மூவனார்
|
155. நெய்தல் |
'ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய், |
||
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய், |
||
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்! |
||
யாரையோ? நிற் தொழுதனெம் வினவுதும்: |
||
5 |
கண்டோர் தண்டா நலத்தை-தெண் திரைப் |
|
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ? |
||
இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ? |
||
சொல், இனி, மடந்தை!' என்றனென்: அதன் எதிர் |
||
முள் எயிற்று முறுவல் திறந்தன; |
||
10 |
பல் இதழ் உண்கணும் பரந்தவால், பனியே. | உரை |
இரண்டாம் கூட்டத்துத்தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது; உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைவன் சொற்றதூஉம் ஆம்.-பராயனார்
|
187. நெய்தல் |
நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக, |
||
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய, |
||
பல் பூங் கானலும் அல்கின்றன்றே; |
||
இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி, |
||
5 |
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய, |
|
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு |
||
யாங்கு ஆவதுகொல் தானே-தேம் பட |
||
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின், |
||
மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு |
||
10 |
இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே? | உரை |
தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கி, தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.-ஒளவையார்
|
190. குறிஞ்சி |
நோ, இனி; வாழிய-நெஞ்சே! மேவார் |
||
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த் |
||
திதலை எஃகின் சேந்தன் தந்தை, |
||
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி, |
||
5 |
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் |
|
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன |
||
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய, |
||
வலை மான் மழைக் கண், குறுமகள் |
||
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே! | உரை | |
பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது; அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்; இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.
|
195. நெய்தல் |
அருளாயாகலோ, கொடிதே!-இருங் கழிக் |
||
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி, |
||
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும் |
||
மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே- |
||
5 |
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, |
|
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென, |
||
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் |
||
நீர் அலைத் தோற்றம் போல, |
||
ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே. | உரை | |
களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.
|
239. நெய்தல் |
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய, |
||
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் |
||
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி, |
||
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் |
||
5 |
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், |
|
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல் |
||
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும் |
||
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு |
||
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை |
||
10 |
வார் கோல் எல் வளை உடைய வாங்கி, |
|
முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர் |
||
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே? | உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.-குன்றியனார்
|
283. நெய்தல் |
ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற |
||
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் |
||
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!- |
||
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய, |
||
5 |
இன்னை ஆகுதல் தகுமோ-ஓங்கு திரை |
|
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி, |
||
ஏமுற விளங்கிய சுடரினும், |
||
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே? | உரை | |
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று, 'வேறுபடாது ஆற்றினாய்' என்று சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|
287. நெய்தல் |
'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி, |
||
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த; |
||
நல் எயிலுடையோர் உடையம்' என்னும் |
||
பெருந் தகை மறவன் போல-கொடுங் கழிப் |
||
5 |
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன், |
|
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான், |
||
காமம் பெருமையின், வந்த ஞான்றை- |
||
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம் |
||
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும், |
||
10 |
'தேர் மணித் தெள் இசைகொல்?' என, |
|
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே. | உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.-உலோச்சனார்
|
372. நெய்தல் |
அழிதக்கன்றே-தோழி!-கழி சேர்பு |
||
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம், |
||
வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு, |
||
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென, |
||
5 |
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு |
|
அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட |
||
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி, |
||
அன்னை தந்த அலங்கல் வான் கோடு |
||
உலைந்தாங்கு நோதல் அஞ்சி, 'அடைந்ததற்கு |
||
10 |
இனையல் என்னும்' என்ப-மனை இருந்து, |
|
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர் |
||
திண் திமில் விளக்கம் எண்ணும் |
||
கண்டல் வேலிக் கழி நல் ஊரே. | உரை | |
மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்ற வேண்டி, உலகியல் மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது.-உலோச்சனார்
|
382. நெய்தல் |
கானல் மாலைக் கழி நீர் மல்க, |
||
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த, |
||
ஆனாது அலைக்கும் கடலே; மீன் அருந்தி, |
||
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் |
||
5 |
துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி, |
|
ஆர் உயிர் அழிவதுஆயினும்-நேரிழை!- |
||
கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்பு நீர்த் |
||
தண்ணம் துறைவன் நாண, |
||
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே. | உரை | |
ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாளாகி நின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினாட்குத் தலைமகள் சொல்லியது.- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார
|