முகப்பு |
குரங்கு (கடுவன், மந்தி, முசு, மயிர்க்கலை, ஊகம்) |
26. குறிஞ்சி |
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை |
||
மேக்கு எழு பெருஞ் சினை இருந்த தோகை |
||
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாடன் |
||
தகாஅன் போலத் தான் தீது மொழியினும், |
||
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே- |
||
தேக் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத்துவர் வாய் |
||
வரை ஆடு வன் பறழ்த் தந்தைக் |
||
கடுவனும் அறியும், அக் கொடியோனையே. |
உரை | |
நற்றாயும் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, 'இஃது எற்றினான்ஆயிற்று?' என்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக் காண்கின்ற காலத்து,'தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெ |
29. குறிஞ்சி |
நல் உரை இகந்து, புல் உரை தாஅய், |
||
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல |
||
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி, |
||
அரிது அவாவுற்றனை-நெஞ்சே!-நன்றும் |
||
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு |
||
மகவுடை மந்தி போல |
||
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. |
உரை | |
இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், 'இவர் எம்மை மறுத்தார்' என்று வரைந்து கொள்ள நினையாது, பின்னும் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது. - ஒளவையார் |
38. குறிஞ்சி |
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை |
||
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் |
||
குன்ற நாடன் கேண்மை என்றும் |
||
நன்றுமன் வாழி-தோழி!-உண்கண் |
||
நீரொடு ஓராங்குத் தணப்ப, |
||
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது. - கபிலர் |
69. குறிஞ்சி |
கருங் கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென, |
||
கைம்மை உய்யாக் காமர் மந்தி |
||
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி, |
||
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும் |
||
சாரல் நாட! நடு நாள் |
||
வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே! |
உரை | |
தோழி இரவுக்குறி மறுத்தது. - கடுந்தோட் கரவீரன் |
90. குறிஞ்சி |
எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு |
||
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய |
||
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க் |
||
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி, |
||
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம் |
||
குன்ற நாடன் கேண்மை |
||
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத்தோழி கூறியது. - மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் |
121. குறிஞ்சி |
மெய்யே, வாழி?-தோழி-சாரல் |
||
மைப் பட்டன்ன மா முக முசுக்கலை |
||
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற |
||
கோட்டொடு போகியாங்கு, நாடன் |
||
தான் குறி வாயாத் தப்பற்குத் |
||
தாம் பசந்தன, என் தட மென் தோளே. |
உரை | |
இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனால் நிகழ்ந்து, மற்று அவன் குறியை ஒத்தவழி, அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்று, ஆண்டு அவனைக் காணாது தலைமகள் மயங்கியவ |
153. குறிஞ்சி |
குன்றக் கூகை குழறினும், முன்றிற் |
||
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும், |
||
அஞ்சும்மன்; அளித்து-என் நெஞ்சம்!-இனியே, |
||
ஆர் இருட் கங்குல் அவர்வயின் |
||
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே. |
உரை | |
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி, 'நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்கு, 'அவர் வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்' எனத் தலைமகள் கூறியது. - கபிலர் |
249. குறிஞ்சி |
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து, |
||
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப, |
||
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக் |
||
குன்றம் நோக்கினென்-தோழி!- |
||
பண்டையற்றோ, கண்டிசின், நுதலே? |
உரை | |
வரைவிடை வைப்ப, 'ஆற்றாகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |
278. பாலை |
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து |
||
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச் |
||
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார் |
||
கொடியர் வாழி-தோழி!-கடுவன் |
||
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து, |
||
ஏர்ப்பனஏர்ப்பன உண்ணும் |
||
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே. |
உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது. - பேரிசாத்தன் |
288. குறிஞ்சி |
கறி வளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து |
||
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன் |
||
இனியன்; ஆகலின், இனத்தின் இயன்ற |
||
இன்னாமையினும், இனிதோ- |
||
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே? |
உரை | |
தலைமகனது வரவுணர்ந்து, 'நம்பெருமான் நமக்கு அன்பிலன்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கபிலர் |
373. குறிஞ்சி |
நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும், |
||
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும், |
||
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக் |
||
கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க் |
||
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை |
||
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி |
||
காந்தள்அம் சிறுகுடிக் கமழும் |
||
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
உரை | |
அலர் மிக்கவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- மதுரைக் கொல்லன் புல்லன் |