Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
3)
இராவண காவியத்தின் கதைக் கருவை விவரிக்க.
தமிழர்கள் உயிர்க்கொலை புரிவதும், அதன் ஊனை உண்பதும், மது அருந்துவதும் தவறு என்னும் கொள்கை உடையவர்கள். ஆனால் வடவர்கள் மேற்கூறப்பட்டவற்றை விருப்புடன் செய்வார்கள். வடவரின் இச்செயலைத் தங்கள் ஆட்சிப் பகுதியில் செய்யத் தமிழர்கள் அனுமதிக்கவில்லை. வடவர்கள் தமிழரின் அனுமதியின்றியும் தமிழ்நிலப் பகுதியில் செய்தனர். எனவே இராவண காவியத்தின் கருவாக உயிர்க் கொலை மறுப்பு இடம் பெற்றுள்ளது.