Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
4)
இராவணனின் தமிழ் உணர்ச்சியை விவரிக்க.
இராவணன் மழலை பேசும் பருவத்திலேயே அளப்பரும் ஈடுபாட்டுடன் தமிழ் கற்றான். தமிழ் என்பது அமிழ்து என்றும், அது தன் தாய்மொழி என்றும் சொல்லி இன்புற்றான். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் முற்றுறக் கற்றுத் தேர்ந்தான். அறிஞர் மக்களோடு கூடித் தலைச்சங்க நூல்களைக் கற்றுத் தேர்ந்தான். பெற்றோர்கள் அவனைச் சான்றோன் என்று பாராட்டினர்.