Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1)
புலவர் குழந்தையின் தமிழ் உணர்ச்சிக்குச் சான்று தருக.
இராவணனை ஆடவர்களில் சிறந்தவன் என்னும் பொருளில் ‘தாமரைத் தார்அணி தமிழநம்பி’ என்று புலவர் குழந்தை குறிப்பிடுகிறார். வண்டார்குழலி பெண்களில் சிறந்தவள் என்ற கருத்தில் ‘தாமரைப் பூமுகம் தமிழநங்கை’ என்று புலவர் குழந்தை குறிப்பிடுகிறார். இவ்வாறு புலவர் குழந்தையின் தமிழ் உணர்ச்சி வெளிப்படுகிறது.