தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses- - பிற்காலப் பாண்டியர்

  • பாடம் - 1

    A03131 பிற்காலப் பாண்டியர்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    பிற்காலப் பாண்டியர்கள் பற்றி விளக்கமாகக் கூறுகிறது. பிற்காலப் பாண்டியர்கள் செய்த போர்கள், அறப்பணிகள் மற்றும் அவர்கள் அயல்நாட்டாருடன் கொண்ட தொடர்பு ஆகியவற்றைச் சான்றுகள் காட்டி விளக்குகிறது. பிற்காலப் பாண்டியர் ஆட்சியின் இறுதிக்காலத்தில் பாண்டிய நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்றத்தையும், மாலிக்காபூர் படையெடுப்பால் பாண்டிய நாடு அல்லல் உற்றதையும் விவரிக்கிறது. பாண்டிய நாட்டைப் பற்றி அயல்நாட்டார் எழுதிவைத்துள்ள குறிப்புகளைத் தொகுத்துக் கூறுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • பிற்காலப் பாண்டியர்கள் யார் யார் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
    • பிற்காலப் பாண்டியர்கள் எவ்வளவு காலம் ஆட்சியில் இருந்தார்கள் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
    • இவர்கள் செய்த போர்கள் பற்றித் தக்க சான்றுகளுடன் அறிந்து கொள்ளலாம்.
    • உள்நாட்டுப் போர், மாலிக்காபூர் படையெடுப்பு ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
    • பிற்காலப் பாண்டியர்களின் அறப்பணிகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
    • பிற்காலப் பாண்டியர் அயல் நாட்டவருடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தமையைப் பற்றி அறியலாம்.
    • பிற்காலப் பாண்டியர் காலத்தில் அயல்நாட்டவர் பாண்டிய நாடு வந்து பல குறிப்புகளை எழுதியுள்ளது பற்றி அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:36:24(இந்திய நேரம்)