தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-மராட்டியர் ஆட்சி

  • பாடம் - 6

    A03136 மராட்டியர் ஆட்சி

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    தமிழகத்தில் தஞ்சையில் மராட்டியர் ஆட்சி தோற்றுவிக்கப்பட்ட வரலாற்றை விரிவாகச் சொல்கிறது. தஞ்சையிலிருந்து ஆண்ட மராட்டிய மன்னர்கள் யார் யார் என்பதையும், அவர்கள் செய்த போர்கள், திருப்பணிகள் ஆகியவற்றையும் விளக்கிச் சொல்கிறது. மராட்டியர் ஆட்சிமுறை எவ்வாறு அமைந்திருந்தது என்பதை விளக்கிக் கூறுகிறது.

     

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இப்பாடத்தின் மூலம் மராட்டியர் எவ்வாறு தமிழகத்தில் நுழைந்தனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

    • மராட்டிய அரசு பரம்பரையை ஏகோஜி என்பவர் எவ்வாறு தொடங்கி வைத்தார் என்பது பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.
    • வடக்கே மராட்டிய மன்னர்களுள் சிறந்து விளங்கிய சிவாஜி எவ்வாறு தமிழகத்தில் புகுந்தார் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    • தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சிமுறை எவ்வாறு அமைந்திருந்தது என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    • மராட்டிய மன்னர்கள் செய்த போர்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    • மராட்டிய மன்னர்களுள் சிலர் ஆங்கிலேயர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
    • இரண்டாம் சரபோஜி என்ற மராட்டிய மன்னர் கலையரசராக இருந்து அரசாண்டதை அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:43:14(இந்திய நேரம்)