Primary tabs
- 6)
வல்லின மெல்லின மெய்களின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும், நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளின் ஒற்றுமை வேற்றுமைகளை விளக்குக
ஒற்றுமைகள் :
(1)இரு நூல்களும் மெல்லின மெய்கள் மூக்கில் இருந்து தோன்றுகின்றன என்று கூறுகின்றன.
(2)இரு நூல்களும் இடையின மெய்கள் கழுத்தில் இருந்து பிறக்கின்றன என்று உரைக்கின்றன.
வேற்றுமை :
தொல்காப்பியம் வல்லின மெய்கள் தலையில் இருந்து தோன்றுகின்றன என்று கூறுகின்றது.
நன்னூலோ வல்லின மெய்கள் நெஞ்சில் (மார்பு) இருந்து பிறக்கின்றன என்று தெரிவிக்கிறது.