Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
5.சமய நல்லிணக்கத்தைக் கிறித்துவர்களும் மற்றவர்களும் வளர்த்த நெறியைப் புலப்படுத்துக.
கிறித்துவப் பாதிரிமார் தங்களை ஐயர் என்று அழைத்துக் கொண்டனர். எளிய மக்கள் அலுவலகப் பணி பெற்றனர். ‘மாதா’ வழிபாடு பரவியது. வேளாங்கண்ணியில் இந்துக்களும் வழிபாடு செய்தனர். கிறித்துவக் கல்வி நிலையங்களில் இந்துக்களும் பயின்றனர். கிறித்துவத் தொண்டு நிறுவனங்கள் பெருகின. மிஷன் ஆஸ்பத்திரிகள் செய்த தொண்டு பலரைக் கவர்ந்தது. தமிழகத் துறவியரும் பாதிரிமாரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொண்டு சமய நல்லிணக்கத்தைப் போதித்தனர்.
