தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை

        ஒரு காலக்கட்டத்தில் தமிழ் மொழிக்கு இசைமரபு இல்லை என்றும், தமிழ்மொழியில் நூல்கள் இல்லை என்றும், பிற மொழியிலிருந்து தமிழன் பெற்றவையே மிகுதி என்றும் கூறப்பட்டது. இக்கருத்துகளுக்கு முடிவு தரும் நிலையிலும் இசைத்தமிழின் வளர்ச்சியையும், நுட்பங்களையும் எடுத்துரைக்கும் வகையிலும் உ.வே.சாமிநாதையர் 1892-யில் சிலப்பதிகாரத்தை வெளியிட்டார். இந்நூலும் இந்நூலுக்கு எழுந்த அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவையும் இசைத்தமிழ் வளங்களையெல்லாம் நமக்கு எடுத்துணர்த்தின. சிலப்பதிகார த்தையும் அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரையையும் மையமாகக் கொண்டு இசைத்தமிழ் ஆய்வுகள் தோன்றலாயின.

    (1) தஞ்சை. இராவு சாகிபு. மு. ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் தொகுதி I, II (1917) கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூல்கள்.

    (2) மதுரை எம்.கே.எம். பொன்னுச்சாமி பூர்வீக சங்கீத உண்மை (1930)

    (3) விபுலானந்த அடிகளாரின் யாழ் நூல் (1947)

    என்ற நூல்கள் இசைத்தமிழ் ஆய்வின் வளங்கண்ட நூற்களாக உள்ளன. இவர்களின் இசைத்தமிழ் ஆய்வினைப் பற்றி இப்பாடம் வாயிலாக அறியலாம்.

        தமிழகத்தின் கலைப் பணியில் இசைக் கலைக்குத் தனியிடம் உண்டு. இவ்விசைக் கலையை வளர்த்த பெரியவர்களாக இசைக் கலைஞர்கள் விளங்குகின்றனர்.

        இசைக் கலைஞர்களின் இசைப் பணியை அறிமுகம் செய்யும் வகையில் இப்பாடம் அமைக்கப்பட்டுள்ளது. இசைப் பொழிவுக் கலைஞர், குரலிசைக் கலைஞர், கொன்னக்கோல் கலைஞர், குழலிசைக் கலைஞர் ஆகிய சிலரையும், இசை வளர்த்த நங்கையர்கள் பற்றியும் அறிமுகம் செய்கிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:06:58(இந்திய நேரம்)