அளவுப் பொருளில் இரண்டு சொற்கள் தொடர்ந்து
வர
அவற்றின் இடையிலும் இறுதியிலும் உம்மையாகிய உருபு
மறைந்து நிற்பது
உம்மைத் தொகை எனப்படும். அவ்வளவுகள்
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு ஆகும்.
எ-டு :
ஒன்றேகால்
-
எண்ணல் அளவை உம்மைத் தொகை
தொடியேகஃசு
-
எடுத்தல் அளவை உம்மைத் தொகை
மரக்கால் படி
-
முகத்தல் அளவை உம்மைத் தொகை
அடி அங்குலம்
-
நீட்டல் அளவை உம்மைத் தொகை
இவற்றை விரித்துக் கூறும் பொழுது, ஒன்றும்
காலும்,
தொடியும் கஃசும், மரக்காலும் படியும், அடியும் அங்குலமும்
என விரியும்.
மற்ற தொகைநிலைத் தொடர்களில் காணப்படாத தனிச்
சிறப்பு இவ்வும்மைத் தொகைக்கு உண்டு. மற்ற தொகைநிலைத்
தொடர்களில் உருபு இரண்டு சொற்களுக்கு இடையில்
மட்டுமே மறைந்து வரும். உம்மைத் தொகையில் இரண்டு
சொற்களுக்கு இடையிலும் இரண்டாம் சொல்லின் இறுதியிலும்
உம் என்னும் உருபு மறைந்து வருவதைக் காணலாம்.
எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
எனும் நான்கு அளவையுள் உம்மிலது அத்தொகை
(நன்னூல்- 368)