Primary tabs
-
4.4 தொகுப்புரை
முடியாட்சியினாலும், குடியாட்சியானாலும், ஒரு நாடு எவ்வாறு
இருக்க வேண்டும் என்பதற்கு வள்ளுவர் பல கருத்துகளைக்
கூறியுள்ளார். ஒரு நாட்டிற்கு விளைபொருளாகிய உணவும்,
அழியாச் செல்வமும் முக்கியம் வாய்ந்தவை. அதைப்போல்,
உள்பகையும் புறப்பகையும் இல்லாது ஒரு நாடு அமைந்திருக்க
வேண்டும். நமது முயற்சி இல்லாமலே கிடைக்கக் கூடிய
இயற்கை வளமும், நீர்வளமும் கிடைக்க வேண்டும். இத்தகைய
தன்மை உடையதாக ஒருநாடு அமைந்திருக்க வேண்டும் என்று
வள்ளுவர் குறிப்பிடுகிறார்.