தன்மை அணி 'பொருள், குணம், இனம், தொழில்' என்னும்
நான்கின் அடிப்படையில் தோன்றும் எனவே தன்மையணி
பொருள் தன்மை, குணத் தன்மை, இனத் தன்மை,
தொழில் தன்மை என நான்கு வகைப்படும். ஒரு
பொருளின்
தன்மையைக் கூறுவது பொருள் தன்மை; ஒரு
குணத்தின் தன்மையைக் கூறுவது குணத்தன்மை. ஒரு
இனமின் - இனத்தின் தன்மையைக் கூறுவது இனத் தன்மை;
ஒரு தொழிலின் தன்மையைக் கூறுவது தொழில் தன்மை
ஆகும். இவற்றுள் முதற்கண் கூறப்படும் பொருள் தன்மை
அணியைச் சான்றுடன் விளக்கமாகக் காண்போம்.
. பொருள் தன்மை
ஒரு பொருளின் பல விதமான இயல்புகளை
உள்ளவாறு எடுத்துக் கூறுவது பொருள் தன்மையாகும்.
எடுத்துக்காட்டு:
நீல மணிமிடற்றன்; நீண்ட சடைமுடியன்;
நூல்அணிந்த மார்பன்; நுதல்விழியன்; -
தோல்உடையன்;
கைம்மான் மறியன்; கனல்மழுவன்; கச்சாலை
எம்மான் இமையோர்க்கு இறை
இப்பாடலின் பொருள்:
திருக்கச்சாலை என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும்
எம்பெருமானாகிய சிவபெருமான் கருங்குவளை மலர் போன்ற
அழகிய கழுத்தை உடையவன்; நீண்ட சடைமுடியை
உடையவன்; முப்புரி நூல் அணிந்த மார்பினை உடையவன்;
நெற்றிக்கண்ணை உடையவன்; புலித்தோல் ஆடை
அணிந்தவன்; கையிலே மான்
குட்டியையும் கனலையும்
மழுவினையும் (கோடரியையும்)
ஏந்தியவன்; அவன் தேவர்க்கும்
இறைவன் ஆவான்.
அணிப் பொருத்தம்: இப்பாடலில் 'சிவபெருமான்' என்ற பொருளின்
(உருவத்தின்)
பல விதமான தோற்ற இயல்புகளை நேரில்
பார்ப்பது போல உள்ளவாறு கூறியிருப்பதால் இப்பாடல்
பொருள் தன்மை அணி ஆயிற்று.