தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலக்கியம் காட்டும் சமண சமயம்

  • P20232 இலக்கியம் காட்டும் சமண சமயம்


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
    E

        தமிழ் மொழியின் வளர்ச்சியில் சமணர்களின் பங்கு
    பற்றிக் கூறுகிறது. சமணர்கள் தமிழுக்குச் செய்த
    தொண்டுகளைப் பொது நிலையிலும், தமிழ் இலக்கியங்களில்
    சமணர்கள் பற்றிய கருத்துகள் இடம் பெற்றுள்ளமையைச்
    சிறப்பு நிலையிலும் சான்றுகளுடன் விவரிக்கிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    • தமிழ் மொழியை வளர்ப்பதில் சமயங்களின் பங்களிப்பு
      மகத்தானதாகும். அவ்வகையில் சமண சமயம் தமிழுக்குச்
      செய்த அருந்தொண்டுகளை விளங்கிக் கொள்ளலாம்.
    • சமணர்கள் உருவாக்கிய சங்கம் பற்றித் தெரிந்து
      கொள்ளலாம்.
    • சமணர்கள் இயற்றிய இலக்கண நூல்கள், காப்பிய
      நூல்கள், கீழ்க்கணக்கு நூல்கள், கேசி நூல்கள்,
      புராணங்கள் எவை என்பதைப் பற்றிய புரிதல் ஏற்படும்.
    • தமிழ் இலக்கண, இலக்கியங்களில் சமணர்கள் பற்றிய
      குறிப்புகளை உணர்ந்து கொள்ளலாம்.
    • சமணர்கள் தமிழுக்குச் செய்த முன்னோடிப் பணிகள்-
      அவற்றின் சிறப்புகள் பற்றி அறியலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:37:06(இந்திய நேரம்)